பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு ரத்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 25, 2020

Comments:0

பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு ரத்து

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் பாலமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 54 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூலை 8ல் வெளியானது. அதில், பல்கலைக் கழகங்களில் ஒட்டு மொத்தமாக இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே, இடஒதுக்கீடு விதிகளை முறையாக பின்பற்றி புதிதாக அறிவிப்பு வெளியிட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இதேபோல் கோ பிநாத், காந்தி ஆகியோரும் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். மூத்த வக்கீல் அஜ்மல்கான், ‘துறைரீதியாக இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வந்தது. மொத்தமாக இடஒதுக்கீடு பின்பற்றினால் அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு இல்லாமல் போகும். இதனால் பலருக்கான வாய்ப்பு பறி போகும்’’ என வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. விதிகளை பின்பற்றி அறிவிப்பு வெளியிட்டு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews