அரையாண்டு தேர்வு இந்தாண்டு கிடையாது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، ديسمبر 17، 2020

Comments:0

அரையாண்டு தேர்வு இந்தாண்டு கிடையாது!

''தமிழகத்தில், பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நீடிப்பதால், இந்தாண்டுக்கான அரையாண்டு தேர்வுகள் கிடையாது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று பிரச்னையால், இந்த ஆண்டு மார்ச்சில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. நோய் தொற்று காரணமாக, மார்ச்சில் நடக்கவிருந்த, பத்தாம் வகுப்பு பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டது. ஆல்பாஸ் ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' என, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. பிளஸ் 1 பொதுத் தேர்விலும், ஒரு பாடத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டு துவங்கிய பின்பும், பள்ளிகளை திறக்க, தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. அதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படவில்லை. தனியார் பள்ளிகளில் மட்டும், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, காலாண்டு தேர்வுகள், ஏற்கனவே ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, பள்ளிகள் திறக்கப்பட்டு, அரையாண்டு தேர்வு தாமதமாக நடத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. கல்லுாரிகளை திறக்க, அரசு அனுமதி அளித்ததால், பள்ளிகளும் படிப்படியாக திறக்கப்படலாம் என, பெற்றோர் எதிர்பார்த்தனர். நடத்த முடியாத சூழல் ஆனால், பள்ளிகளை திறக்க, அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வுகளையும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து வகுப்புகளுக்கும், அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் மட்டும் விருப்பப்பட்டால், ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம் என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:கொரோனா பிரச்னையால், நடப்பாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 'ஆன்லைன்' தனியார் பள்ளிகள் விரும்பினால், 'ஆன்லைன்' வழியே நடத்தலாம். மேலும், பள்ளிகள் இன்னும் திறக்கப்படாததால், ஒன்பதாம் வகுப்பு வரை, 50 சதவீத பாடங்கள், நடப்பு கல்வி ஆண்டில் குறைக்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், 35 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளை எதிர் கொள்வதற்காக, மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும், 35 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அறிக்கை முதல்வரிடம் ஆலோசித்து, பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு, அமைச்சர் கூறினார். இதற்கிடையே, எந்தெந்த பாடங்களுக்கு பொது தேர்வுகள் நடத்தப்படும் என்ற விபரம், அனைத்து பள்ளிகளுக்கும், முதன்மை கல்வி அலுவலர் வழியாக அனுப்பப்பட உள்ளது. இதற்காக, வகுப்புகள் வாரியாக, குறைக்கப்பட்ட பாடங்களை முடிவு செய்யும் பணிகளில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''தமிழகத்தில், பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நீடிப்பதால், இந்தாண்டுக்கான அரையாண்டு தேர்வுகள் கிடையாது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று பிரச்னையால், இந்த ஆண்டு மார்ச்சில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. நோய் தொற்று காரணமாக, மார்ச்சில் நடக்கவிருந்த, பத்தாம் வகுப்பு பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டது. ஆல்பாஸ்
ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' என, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. பிளஸ் 1 பொதுத் தேர்விலும், ஒரு பாடத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டு துவங்கிய பின்பும், பள்ளிகளை திறக்க, தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. அதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படவில்லை. தனியார் பள்ளிகளில் மட்டும், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, காலாண்டு தேர்வுகள், ஏற்கனவே ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, பள்ளிகள் திறக்கப்பட்டு, அரையாண்டு தேர்வு தாமதமாக நடத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. கல்லுாரிகளை திறக்க, அரசு அனுமதி அளித்ததால், பள்ளிகளும் படிப்படியாக திறக்கப்படலாம் என, பெற்றோர் எதிர்பார்த்தனர்.
நடத்த முடியாத சூழல்
ஆனால், பள்ளிகளை திறக்க, அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வுகளையும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து வகுப்புகளுக்கும், அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் மட்டும் விருப்பப்பட்டால், ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம் என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:கொரோனா பிரச்னையால், நடப்பாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 'ஆன்லைன்'
தனியார் பள்ளிகள் விரும்பினால், 'ஆன்லைன்' வழியே நடத்தலாம். மேலும், பள்ளிகள் இன்னும் திறக்கப்படாததால், ஒன்பதாம் வகுப்பு வரை, 50 சதவீத பாடங்கள், நடப்பு கல்வி ஆண்டில் குறைக்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், 35 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளை எதிர் கொள்வதற்காக, மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும், 35 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அறிக்கை
முதல்வரிடம் ஆலோசித்து, பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு, அமைச்சர் கூறினார். இதற்கிடையே, எந்தெந்த பாடங்களுக்கு பொது தேர்வுகள் நடத்தப்படும் என்ற விபரம், அனைத்து பள்ளிகளுக்கும், முதன்மை கல்வி அலுவலர் வழியாக அனுப்பப்பட உள்ளது. இதற்காக, வகுப்புகள் வாரியாக, குறைக்கப்பட்ட பாடங்களை முடிவு செய்யும் பணிகளில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة