தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சரண்டர்: 484 ஆசிரியரல்லா பணிகள் உருவாக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، ديسمبر 20، 2020

Comments:0

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சரண்டர்: 484 ஆசிரியரல்லா பணிகள் உருவாக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசு ஆணையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நிர்வாகம், அலுவலகம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், பதிவறை எழுத்தர் பணியிடங்கள் தோற்றுவிக்க ஆண்டுக்கு ரூ.12.84 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிலையில் தற்போது அரசுப் பள்ளிகளில் 233 உபரி உதவியாளர் பணியிடங்கள் இருப்பதாகவும், 622 இளநிலை உதவியாளர் பணியிடங்களும், 95 பதிவறை எழுத்தர் பணியிடங்களும் தேவை இருப்பதாகவும் பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். எனவே 233 உபரி உதவியாளர் பணியிடங்களை மாணவர்கள் எண்ணிக்கை 751 முதல் 1000 வரை உள்ள பள்ளிகளுக்கு பகிரிந்தளிக்க உத்தரவிடப்படுகிறது. இதன் மூலம் 389 இளநிலை உதவியாளர் பணியிடங்களும், 95 பதிவறை எழுத்தர் பணியிடங்களும் சேர்த்து மொத்தம் 484 பணியிடங்கள் அனுமதிக்கப்படும். இதற்கு ஏற்படும் ஊதிய செலவினங்களுக்கு ஏற்றவாறு 250 பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்கள் அரசுக்கு சரண்டர் செய்யப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة