சுருக்கம்
உள்ளூர் விடுமுறை 'புரெவி' புயல் முன்னிட்டு 04.12.2020 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாட்டிலுள்ள ஆறு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆணை வெளியிடப்படுகிறது.
பொது (பல்வகைத் துறை
அரசாணை (டி) எண். 454
நாள்: 03.12.2020
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'புரெவி' புயலானது 04.12.2020 (வெள்ளிக்கிழமை) அன்று கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கவுள்ளதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கு 04.12.2020 (வெள்ளிக்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அளித்து, அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.01.2021 (இரண்டாம் சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது. 2. மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலகங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாடு செய்யுமாறு மேற்கண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(ஆளுநரின் ஆணைப்படி)
1. செந்தில்குமார்
அரசு முதன்மைச் செயலாளர் (மு...பொ) 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
உள்ளூர் விடுமுறை 'புரெவி' புயல் முன்னிட்டு 04.12.2020 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாட்டிலுள்ள ஆறு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆணை வெளியிடப்படுகிறது.
பொது (பல்வகைத் துறை
அரசாணை (டி) எண். 454
நாள்: 03.12.2020
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'புரெவி' புயலானது 04.12.2020 (வெள்ளிக்கிழமை) அன்று கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கவுள்ளதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கு 04.12.2020 (வெள்ளிக்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அளித்து, அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.01.2021 (இரண்டாம் சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது. 2. மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலகங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாடு செய்யுமாறு மேற்கண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(ஆளுநரின் ஆணைப்படி)
1. செந்தில்குமார்
அரசு முதன்மைச் செயலாளர் (மு...பொ) 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.