மருத்துவ கவுன்சிலிங் பொதுப் பிரிவுக்கு 23ல் துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 21, 2020

Comments:0

மருத்துவ கவுன்சிலிங் பொதுப் பிரிவுக்கு 23ல் துவக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
:'மருத்துவப் படிப்பில், இன்று சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்; நாளை மறுநாள், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. சென்னை, பெரியமேட்டில் உள்ள, நேரு உள்விளையாட்டு அரங்கில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, நேற்றுடன் முடிவடைந்தது. இதில், உள்ஒதுக்கீட்டில் உள்ள, 313 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின. 92 பி.டி.எஸ்., பல் மருத்துவப் படிப்பு இடங்களில், 86 இடங்கள் நிரம்பியுள்ளன. இதைத்தொடர்ந்து, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங், இன்று நடைபெற உள்ளது. இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு, 5 சதவீத எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, 10 இடங்கள் உள்ளன. விளையாட்டு பிரிவில், ஏழு எம்.பி.பி.எஸ்., மற்றும்- ஒரு பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.மேலும் விபரங்களை, tnhealth.tn.gov.in, tnmedicalselection.org என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். இதன்பின், வரும், 23 முதல், டிச., 4 வரை, பொதுப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.வரும், 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாணவர் சேர்க்கை நடைபெறாது என, அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தாதீர்! தமிழகத்தில் இந்தாண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அமலுக்கு வந்துள்ளது. அதில் இடங்களை பெற்ற மாணவர்களிடம் கட்டணம் பெற, மருத்துவ கல்லுாரிகள் கடுமை காட்டாக்கூடாது என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து, அரசு மற்றும் சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லுாரிகளுக்கு, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஏழை, எளிய மாணவர்கள் பயன் பெறும் வகையில், மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகையை, முதல்வர் பழனிசாமி., அறிவித்துள்ளார். எனவே, கல்லுாரிகளில் சேர வரும் மாணவர்களிடம், கல்வி கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என, கட்டாயப்படுத்த கூடாது.கல்வி கட்டணம் செலுத்தாவிட்டாலும், மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்த பின், சேர்க்கை ஆணை வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews