5100 பேர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 11, 2020

5100 பேர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்தாண்டு போராட்டத்தில் ஈடுபட்ட 5100 பேர் மீதான 17 பி குற்றச்சாட்டு குறிப்பாணை நடவடிக்கையை ரத்து செய்யும்படி ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், அன்பரசு, மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மதுரையில் ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறியதாவது:புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 5100 பேருக்கு 17 பி குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. இதனால் பதவி உயர்வு, ஓய்வு பெற முடியாமல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர். இந்த நடவடிக்கையால் தகுதியானவர்களுக்கு நல்லாசிரியர் விருது மறுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஓய்வு பெற முடியவில்லை. செப்., 14 ல் துவங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் 5100 பேர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews