ஆதார் எண் இருந்தால் போதும் - டிசி இல்லாமல் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்கலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أغسطس 22، 2020

ஆதார் எண் இருந்தால் போதும் - டிசி இல்லாமல் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்கலாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பலரது வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது. மாத சம்பளத்தில்‌ பிடித்தம்‌, வருமான இழப்பு, வேலையிழப்பு என பல சிக்கல்களில்‌ இருந்து மீண்டு வந்த போதும்‌, நடுத்தர . குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்‌, வாழ்வாதாரம்‌ காரணமாக, குழந்தைகள்‌ படிப்பை பாதியிலேயே நிறுத்தவும்‌ வாய்ப்புகள்‌ அதிகம்‌. இதனை தவிர்க்கும்‌ விதமாக, திருப்பூர்‌ அரசு பள்ளிகள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ பல்வேறு விழிப்புணர்வுகளை சமூக ஊடகங்கள்‌ மூலமாக பெற்றோர்களிடம்‌ ஏற்படுத்தி வருகின்றனர்‌. டி.சி., தேவையின்றி, எக்காரணம்‌ கொண்டும்‌ 14 வயதுக்கு உட்பட்ட குழந்தையின்‌ கல்வி பாதிக்கப்‌ படக்கூடாது என்பதற்காக வயதுக்கேற்ற வகுப்பில்‌ சேர்த்துக்கொள்ளலாம்‌ என்கிறது கட்டாயக்கல்வி. . இது பலருக்கும்‌ தெரியாததால்‌, நிறைய குழந்தைகள்படி. ப்பை பாயில்‌ நிறுத்தி விடுகின்றனர்‌. * எட்டாம்‌ வகுப்பு வரை வேறு எந்த பள்ளியில்‌ படித்திருந்தாலும்‌, படிப்பை இடையில்‌ கைவிட்டிருந்தாலும்‌, டி.ச., கிடைக்காத நிலையில்‌ படிப்பை கைவிடும்‌ சூழல்‌ ஏற்பட்டாலும்‌, குழந்தைகளை 100 சதவீதம்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌. சோக்க.... முடியும்‌. இதுகுறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌ கூறுகையில்‌, ஒரு சிறுவன்‌ குடும்ப சூழல்‌ காரணமாக, ஈம்‌ வகுப்போடு நின்றுவிட்டான்‌. கடந்த ஓராண்டாக பள்ளி செல்லவில்லை. தற்போதைய வயதிற்கு எட்டாம்‌ வகுப்பு படிக்க வேண்டுமெனில்‌, டி.சி., இல்லாமலே அரசு பள்ளிகளில்‌ எட்டாம்‌ வகுப்பு சேர்ந்துகொள்ளலாம்‌. ஆதார்‌ எண்‌ இருந்தால்‌ போதும்‌. இதுகுறித்து பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர்‌ சேர்க்கை துவங்கி நடைபெற்று வருகிறது. இடைநின்ற குழந்தைகளை சேர்க்க விரும்புவோர்‌ இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்‌ என்றனர்‌: "திருப்பூர்‌ மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்‌ ரமேஷ்‌ கூறிய தாவது: மாணவர்கள்‌ சார்பாக எவ்வித ஆவணங்களையும்‌ தற்போது சமர்ப்பிக்க இயலாத சூழல்‌ இருந்தாலும்‌, எவ்வித ஆவணங்‌ களுமின்றி பெற்றோரிடம்‌ உரியகடிதம்‌ பெற்றுக்கொண்டு சேர்க்கை வழங்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்‌. பெற்றோர்கள்‌ பின்னர்‌ ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்‌. சந்தேகங்களுக்கு அருகில்‌ உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியரை அணுகலாம்‌. இவ்வாறு அவர்‌ கூறினார்‌.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

إجمالي مرات مشاهدة الصفحة