கல்வித்தரம் பாதிக்காத வகையில் பாடத்திட்டங்கள் குறைக்க முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 18, 2020

Comments:0

கல்வித்தரம் பாதிக்காத வகையில் பாடத்திட்டங்கள் குறைக்க முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வித்தரம் பாதிக்காத வகையில் பாடத்திட்டங்கள் குறைக்க முடிவு: தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் எவை நீக்கப்படலாம்? இவை தக்க வைக்கப்படும்?
கொரோனா எதிரொலியாக ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களின் உள்ளடக்கத்தை, 30 சதவீத அளவுக்கு குறைக்க, பரிந்துரை குழு திட்டமிட்டுள்ளதாக, தகவல் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என, கணிக்க முடியவில்லை. இந்நிலையில் இந்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களின் உள்ளடக்கத்தை, 30 சதவீதம் வரை குறைக்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆசிரியர்கள், புத்தக ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு, பாடத்திட்டங்களின் உள்ளடக்கங்களை குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் கல்வித்திறனும், பாடங்களின் தரமும் பாதிக்காத வகையில், பாடத்திட்டங்கள் குறைக்கப்படலாம். தமிழ், ஆங்கில பாடங்களில் இலக்கண பகுதிகள் தக்க வைத்து கொள்ளப்படும். உரைநடை பகுதிகள், கட்டுரைகள் நீக்கப்படலாம்' என்றனர்.
''கல்வி சேனல் மூலம், மாணவ - மாணவியருக்கு கல்வி போதிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி, குள்ளம்பாளையம்வீட்டில், நம் நிருபருக்குஅமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: கொரோனா தொற்று காரணமாக, பள்ளி மாணவ - மாணவியருக்கு, கல்வி சேனல் மூலம், பாடம் போதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.'ஆன்லைன்' வசதியை விட, கல்வி சேனல் மூலமாக, எளிதில் கல்வியை கொண்டு சேர்க்க முடியும்என்பதால், இம்முயற்சி மேற்கொண்டு உள்ளோம்.மேலும், பொதிகை உட்பட ஓரிரு சேனல்கள் மூலம், கல்வி போதிக்க முடிவு செய்துள்ளோம். வகுப்புக்கு ஒரு மணி நேரம் என்ற அடிப்படையில், திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.வகுப்பு வாரியாக பாடத் திட்டத்தை குறைக்க, முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை, ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கப்படலாம். ஒன்று முதல், பிளஸ் 2 வரை, பாடத்திட்டம் குறைக்கப்படும். எந்த வகுப்புக்கு, எந்த பாடம் முக்கியமோ, அந்த பாடங்களை மட்டுமே கொண்டு, பாடத்திட்டம் குறைக்கப்படுகிறது. மேலும், ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, 71 லட்சம் மாணவ - மாணவி யருக்கு, வகுப்பு மற்றும் பாட வாரியாக புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, அந்தந்த குடோன்களுக்கு அனுப்பி, இருப்பு வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் உத்தரவுக்கு பின்பே, அனுப்பப்பட்டுள்ள பாடப் புத்தகத்தில், எந்த பாடங்களை தவிர்ப்பது, எதை போதிப்பதுஎன, அறிவிக்கப் படும்.இவ்வாறு, அவர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews