ஓய்வூதியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷய - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 18, 2020

Comments:0

ஓய்வூதியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷய

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தெலங்கானா அரசின் ஓய்வூதிய குறைப்பை கண்டித்த அம்மாநில உயர்நீ திமன்றம், எந்த சட்டமும் அதை அனுமதிக்கவில்லை என்றது. ஹைதராபாத்: தெலங்கானா மாநில உயர்நீதிமன்றத்தில் திங்கட் கிழமையன்று விசாரணையின் போது பழைய மற்றும் ஓய்வுபெற்ற மக்களின் ஓய்வூதியத்தை குறைப்பதற்கு சட்டம் அனுமதிக்காது என்பதை தெளிவு படுத்தியதுடன்- இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஓய்வூதியத்தை குறைப்பதற்கு மாநில அரசிற்கு எந்த சட்ட ஏற்பாடு உதவியது என தனது வியப்பை பதிவு செய்தது. மாண்புமிகு தலைமை நீதிபதி ராகவேந்திர சிங் சவுகான் மற்றும் நீதிபதி பி.விஜய்சென் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்க இரண்டு நாட்கள் அவகாசம் அளித்தது. மாநிலத்தில் பென்சன் குறைக்கப்பட்டதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் திரு எஸ்.சத்யம் ரெட்டி மற்றும் பலர் தாக்கல் செய்த மனுக்களின் மீதான விசாரணை திங்களன்று நடைபெற்றது. அரசினை கடுமையாக விமர்சித்துப் பேசிய மாண்புமிகு தலைமை நீதிபதி அரசு ஒரு நிதிசார் அவசரநிலை அறிவிக்காத நிலையில், இது போல் ஓய்வூதியத்தைக் குறைக்க அதற்கு எந்த அதிகாரமும் இல்லை. எதுவாக இருப்பினும் உடனடியாக ஓய்வூதியத்தை வழங்குங்கள், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் கூட இது போன்று எந்த விதிமுறையும் சொல்லப்படவில்லை. ஓய்வூதியம் குறைக்காமல் தொடரவேண்டும் என்பதுதான் சட்டபூர்வமான நிலை என்றார். அரசாங்கத்தின் மேற்படி நடவடிக்கையினால் அவர் மகிழ்ச்சியடையாமல் அதிருப்தியடைந்ததுடன், மேலும் தெரிவிக்கையில் "ஓய்வூதியம் என்பது ஒரு தொண்டு போன்ற இனாம் அல்ல, அதை மறுப்பதற்கு சட்டம் உங்களுக்கு (அரசாங்கத்திற்கு) எந்த அனுமதியையும் வழங்காது" என்றார். ஓய்வூதியம் தொடர்பாக நீங்கள் பிறப்பித்த அரசாணைக்கு சட்டபூர்வமான அடிப்படை இல்லை, எனவே அது தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்றார், மேலும் அரசாங்கத்தின் எதிருரையை நிராகரித்த நீதிபதியவர்கள், அதில் பல "தவறான கருத்துக்கள்" சொல்லப்பட்டுள்ளது என்றார். அரசிற்காக ஆஜரான அட்வகேட் ஜெனரல் திரு பி.எஸ்.பிரசாத் வாதிடுகையில் அரசிற்கு சட்டபூர்வ உரிமை இல்லை என்பதை ஒப்புக் கொண்ட போதிலும், கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக அரசிற்கு வருவாய் இல்லாமல் போனதால் இத்தகைய நிலைக்குச் செல்ல வேண்டியதாயிற்று எனவும், முதலில் ஓய்வூதியத்தை கூடுதலாக குறைத்த போதிலும், நீதிமன்றத்தின் தலையீட்டிற்கு பின்னர் அரசு அதை மாற்றியமைத்துள்ளது என்பதையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்தார். இதில் குறுக்கிட்ட நீதிபதியவர்கள் "சாத்தியமற்ற கோட்பாடு என்பது ஒப்பந்தத்திற்கு பொருந்தலாம், ஆனால் ஒரு சேவைக்குப் பொருந்தாது" என்று கூறியது. ஊரடங்கு அமுல்படுத்திய பின்னர், அரசாங்கம் முதலில் அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு 50% ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை குறைத்தது. பின்னர் உயர்நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, ஓய்வூதியத்தை 75% என உயர்த்தியதுடன், வெட்டு என்பதை 25% ஆக குறைத்தது. வழக்கை விசாரித்தபோது, அமர்வு நீதிபதிகள் 25% குறைப்பிற்கு கூட ஒப்புதல் அளிக்கவில்லை என்பதுடன், உடனடியாக நிறுத்திவைக்கப்பட்ட தொகைகளை ஓய்வூதியர்களுக்கு திரும்ப வழங்குமாறு வலியுறுத்தியது. மேலும் நீதிபதிகள் தெரிவிக்கையில் "ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் வாழ்க்கையின் இறுதியில் உள்ளனர், அவர்களின் குழந்தைகளால் அவர்கள் பார்த்துக் கொள்ளப்படாமல் இருக்கலாம், அவர்களில் சிலர் ஓய்வு இல்லங்களில் தங்கியிருக்கிறார்கள்" இப்படிப்பட்ட சூழலில் அவர்களின் இந்தப் பயனும் குறைக்கப்பட்டால் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு எங்கே போவார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார்கள். மாநிலத்திற்கு மத்தியிலிருந்து வர வேண்டிய நிதி உதவிகள் வரவில்லை, மாநிலத்தின் பங்களிப்பான ஜிஎஸ்டி வரியின் பங்குத்தொகை வரவில்லை என அட்வகேட் ஜெனரல் விளக்கினார். அரசின் சிரமங்களை விரிவாக விவரிக்கும் வகையில் ஒரு எதிருரை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனவும், எனவே வழக்கை ஜூலை இறுதி வாரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்ற வேண்டுகையை முன்வைத்தார். "உங்களுக்கு அங்கே (மத்திய அரசில்) அநீதி இழைக்கப்பட்டால், அதற்கு எதிராகப் போராடுங்கள், அதைவிடுத்து மற்றொரு தவறு மேற்கொள்வேன் என்பது சரியான பதிலாக இருக்காது, ஏனெனில் இரண்டு தவறுகள் சேர்ந்து ஒரு சரியானது என்பதை உருவாக்க முடியாது" என அரசை கடுமையாக சாடிய உயர்நீதிமன்ற அமர்வு வழக்கை ஜூன் 17ற்கு ஒத்தி வைத்தது.
நன்றி: Times of India 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews