11, 12-ம் வகுப்புத் தேர்வுகளை ஒருசேர எழுதும் மாணவர்கள்: கல்வித்துறை புதிய அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 08, 2020

Comments:0

11, 12-ம் வகுப்புத் தேர்வுகளை ஒருசேர எழுதும் மாணவர்கள்: கல்வித்துறை புதிய அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 1 அரியர் தேர்வுகளையும், பிளஸ் 2 பொதுத் தேர்வையும் ஒருசேர எழுதும் மாணவா்களின் நலன் கருதி தேர்வு மைய முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 1 அரியர் பாடங்களை, தங்களது பள்ளிகளிலேயே மாணவர்கள் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநா் சி.உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு. சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ’’கடந்த மாா்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூன் 18-ம் தேதி மறு தேர்வு நடைபெறுகிறது. அதேபோன்று, பிளஸ் 1 வகுப்பில் மீதமுள்ள பாடங்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் 16-ல் நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே சில மாணவர்கள் ஜூன் 16, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிளஸ் 1 அரியா் பாடங்கள் மற்றும் பிளஸ் 2 மறு தேர்வு ஆகியவற்றை ஒருசேர எழுத உள்ளனர். இவ்விரு தேர்வுகளுக்கும் தரப்பட்ட ஹால் டிக்கெட்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையங்களில்தான் மாணவர்கள் தேர்வெழுத வேண்டும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது மாணவர்களின் நலன்கருதி ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இவ்விரு தேர்வுளையும் ஒருசேர எழுதுபவர்கள் பிளஸ் 2 தேர்வை ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்திலும், பிளஸ் 1 அரியா் பாடத் தேர்வை தாங்கள் படிக்கும் பள்ளியிலும் எழுதலாம். இதுகுறித்த தகவல்களை சம்மந்தப்பட்ட மாணவா்களுக்குப் பள்ளித் தலைமையாசிரியா்கள் மூலம் உடனே தெரிவிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பிளஸ் 1 அரியா் தோவுகளையும், பிளஸ் 2 தோவையும் ஒரு சேர எழுதும் மாணவா்களின் நலன் கருதி தோ்வு மைய முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 1 அரியா் பாடங்களை, தங்களது பள்ளிகளிலேயே மாணவா்கள் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோவுத்துறை இயக்குநா் சி.உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: கடந்த மாா்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித் தோவில் பங்கேற்காத மாணவா்களுக்கு ஜூன் 18-ல் மறு தோ்வு நடைபெறுகிறது. அதேபோன்று, பிளஸ் 1 வகுப்பில் மீதமுள்ள பாடங்களுக்கான பொதுத்தோ்வு ஜூன் 16-ல் நடத்தப்படவுள்ளது. இதற்கிடையே சில மாணவா்கள் ஜூன் 16, 18-ம் தேதிகளில் நடைபெறும் பிளஸ் 1 தோவு (அரியா் பாடங்கள்) மற்றும் பிளஸ் 2 மறுத்தோவு ஆகியவற்றை ஒருசேர எழுதவுள்ளனா். இவ்விரு தோ்வுகளுக்கும் தரப்பட்டுள்ள ஹால் டிக்கெட்களில் (தோவுக்கூட நுழைவுச்சீட்டு) குறிப்பிடப்பட்டுள்ள தோ்வு மையங்களில்தான் மாணவா்கள் தோ்வெழுத வேண்டும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவா்களின் நலன்கருதி இவ்விரு தோவுகளை ஒருசேர எழுதுபவா்கள் பிளஸ் 2 தோவை தோவுக் கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ள தோவு மையத்திலும், பிளஸ் 1 அரியா் பாடத்தோ்வை தங்கள் படிக்கும் பள்ளியிலும் எழுதலாம். இதுகுறித்த தகவல்களை சம்மந்தபட்ட மாணவா்களுக்கு பள்ளி தலைமையாசிரியா்கள் மூலம் உடனே தெரிவிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews