ஆன்லைனில் அனைத்து பொருட்களையும் ஆர்டர் செய்யலாம்.. பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் தளர்வு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 01, 2020

Comments:0

ஆன்லைனில் அனைத்து பொருட்களையும் ஆர்டர் செய்யலாம்.. பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் தளர்வு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியாவில் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 18ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இந்தியாவில் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம். லாக்டவுன் 3.0: ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் மட்டும் டாக்சிகள் ஓட அனுமதி.. புதிய கட்டுப்பாடு
இதனால் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் அத்தியாவசிய பொருட்கள் அல்லாத மற்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும். அதாவது புத்தகங்கள், உடைகள், போன்கள் போன்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும். ஆனால் சிவப்பு மண்டலங்களில் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே ஆர்டர் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுக்க ஆன்லைன் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆன்லைன் வர்த்தகத்தை மீட்டு எடுக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த ஏப்ரல் மாதம் முழுக்க ஆன்லைன் மூலம் ஒரு போன் கூட விற்பனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews