10 ஆயிரம், 'கேங்மேன்'கள் தேர்வு: மின் துறை அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 14, 2020

Comments:0

10 ஆயிரம், 'கேங்மேன்'கள் தேர்வு: மின் துறை அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, 5,000 பேருடன் கூடுதலாக, 5,000 கேங்மேன்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்,'' என, மின் துறை அமைச்சர், தங்கமணி அறிவித்துஉள்ளார். சட்டசபையில் அவரது அறிவிப்புகள்: துணை மின் நிலையங்களில் உள்ள உபரி நிலங்களில், 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒரு மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படும். சூரியசக்தி மின்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், 50 மெகாவாட் திறன் உள்ள, 'சோலார்' மேற்கூரை அமைப்புகள், 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் இந்த ஆண்டில், 50 ஆயிரம் புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில், 'பிரிபெய்ட் மின் மீட்டர்' பொருத்தும் திட்டம், 390 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் 'மின்னணு முறையில் பணம் செலுத்தினால், வீட்டு வாசலிலேயே வசூல்' என்ற வசதி, 1.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும்.
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் சேவை மையங்களில், புகார்களின் பதிவு குறித்த தகவல் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படும் மின் நுகர்வோர்களின் புகார்களை, 'மொபைல் ஆப்' வாயிலாக பதிவிடுதல் மற்றும் நிவர்த்தி செய்தல் திட்டம், 50 லட்சம் ரூபாய் செலவில் அறிமுகப்படுத்தப்படும். மின் வாரியத்தின் அனைத்து அலுவலகங்களிலும், 'ஆதார்' உடன் கூடிய, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை அமல்படுத்தப்படும் 'கேங்மேன்' பணியிடத்திற்கு, 5,000 பேர் தேர்வு செய்யப்பட இருந்த நிலையில், அது, 10 ஆயிரம் பேராக உயர்த்தப்படும். மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும், அலுவலக பயன்பாட்டிற்கும், முதல் கட்டமாக, 75 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்று மின் வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும் சென்னை நகரில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை, சூரியசக்தி மின் நிலையம் வாயிலாக இயக்குவதற்கு, தேவையான முயற்சிகள், 7.4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்மதுவிலக்கு மது அருந்திவிட்டு, வாகனங்களை ஒட்டுவதற்கு எதிராக, விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். இதற்காக, மது பாட்டில்களில் ஒட்டப்படும், 'லேபிள்'களில், 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற, வாசகம் அச்சிடப்படும்
'டாஸ்மாக்' நிறுவனத்தின் சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு, மாத தொகுப்பு ஊதியம், 500 ரூபாய் கூடுதலாக தரப்படும்போதைப்பொருள் குற்றவாளிகள், மீண்டும் அந்த தொழிலுக்கு திரும்பாமல் இருக்க, அவர்களுக்கு மறுவாழ்வு நிதி வழங்க, 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும். மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த, 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில், முக்கிய பங்கு வகிக்கும் போலீசாருக்கும், தனிநபர்களுக்கும், சிறப்பு வெகுமதிகள் வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews