விடைத்தாள் பாதுகாப்புக்கு ஜிபிஎஸ், கேமரா வசதி: TNPSC அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 15, 2020

Comments:0

விடைத்தாள் பாதுகாப்புக்கு ஜிபிஎஸ், கேமரா வசதி: TNPSC அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இனி குரூப் 2ஏ, குரூப் 4ஆகியவற்றுக்கு இரு தேர்வுகள் நடத்தப்படும், தேர்வர்களின் கைரேகை கட்டாயம் உள்ளிட்ட சில மாற்றங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அண்மையில் குரூப் 2ஏ, குரூப் 4 ஆகிய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, டிஎன்பிஎஸ்சி 99 பேருக்கு வாழ்நாள் தடை விதித்தது. அதேபோல தேர்வுக்கு ஆதார் கட்டாயம் உள்ளிட்ட மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது மேலும் சில மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ''முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வு அறிமுகம்
குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கு இனி முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
தேர்வு நேரங்களில் மாற்றம்
தேர்வு சரியாக காலை 10 மணி முதல் 1 மணி வரை நடக்கும். இதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக 9 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டியது அவசியம். 10 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்களுக்கு அனுமதி இல்லை.
காலை, மாலை இரு வேளைகளிலும் தேர்வு எனும்போது பிற்பகல் 3 மணிக்கு மாலைத் தேர்வு தொடங்கும். அனைத்து வினாக்களுக்கும் விடையளிப்பது கட்டாயம்
இனி வரும் கொள்குறி வகைத் தேர்வுகளில் அனைத்து வினாக்களுக்கும் கட்டாயம் விடையளிக்க வேண்டும். எந்தக் கேள்விக்காவது விடை அளிக்கவில்லை என்றால், கூடுதலாக அளிக்கப்படும் E என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும். எந்தெந்தக் கேள்விக்கு எந்தெந்த விடையை (A,B,C,D E) அளித்துள்ளார் என்பதையும் குறிப்பிட வேண்டும். இதற்குக் கூடுதலாக 15 நிமிடங்கள் அளிக்கப்படும். கை ரேகைப் பதிவு
தேர்வருடைய விடைத்தாளை அடையாளம் காண முடியாதபடி, விடையளிக்கும் பகுதியில் தேர்வரின் கையெழுத்துக்குப் பதிலாக இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும்.
விடைத்தாள் பாதுகாப்பு
விடைத்தாள்களைப் பாதுகாப்பான முறையில் தேர்வாணையத்துக்கு எடுத்து வர, அதி நவீன ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்புக் கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இதை நேரலையாக தேர்வாணைய அலுவலகத்தில் கண்காணிக்க 24 மணி நேரக் கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்படும்.
தகவல்கள், கருத்துகளைத் தெரிவிக்க புதிய வசதி தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க தேர்வாணைய இணையதளத்தில் சிறப்புத் தகவல் தளம் உருவாக்கப்படும். தேர்வாணையத்தின் ஆக்கபூர்வமான மாற்றங்கள் குறித்த பின்னூட்டங்களைத் தேர்வர்கள் பகிர்ந்து கொள்ளலாம். அவர்களின் ரகசியத் தன்மை பாதுகாக்கப்படும்''. இவ்வாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகளை விதித்தது டிஎன்பிஎஸ்சி: குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வுகளில் பொது அறிவு தாள் இரண்டாக நடத்தப்படும் - டிஎன்பிஎஸ்சி.. குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகள் முதல் நிலை, முதன்மை நிலை என இரு தேர்வுகளாக மாற்றம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வரும் வரும் குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளுக்கு இனி இரண்டு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகள் மூலமாக இனி இந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்துகொண்டே இருக்கிறது. இந்த முறைகேடுகள் தொடர்பாக கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி டிஎன்பிஎஸ்சி அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் கடந்த வாரத்தில் 6 முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இன்று சில முக்கிய மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
மாற்றங்கள்: குரூப் 4, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளுக்கு பொது அறிவுத்தாள் மட்டுமே கொண்ட ஒரே ஒரு தேர்வு மட்டுமே இதுவரை நடந்து வந்தது. ஆனால் இனி, இந்த தேர்வுகள் இரண்டு நிலைகளாக நடத்தப்பட உள்ளன. முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வுகளாக நடத்தப்பட இருக்கின்றன. 2 தேர்வுகளும் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். தேர்வர்கள் 9 மணிக்கே தேர்வு அறைக்குள் வந்துவிட வேண்டும். 10 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். விடைத்தாளில் தேர்வரின் கையெழுத்துக்கு பதில் கைரேகை பதிவு செய்யப்படும் அனைத்து வினாக்களுக்கும் விடைகள் அளிப்பது கட்டாயாமாகும். ஏதேனும் ஒரு வினாவுக்கு பதில் அளிக்கவில்லையென்றால் விடைத்தாள் செல்லாது என்று அறிவிக்கப்படும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews