அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் நாளை தமிழக அரசு அறிவிப்பு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 13, 2020

Comments:0

அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் நாளை தமிழக அரசு அறிவிப்பு?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும் அமல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது .
பள்ளி செல்லும் மாணவ மாணவிகளின் நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவிபெ றும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுகிறது . தமிழகத்தில் தற்போது 43 ஆயிரம் பள்ளிக ளில் சத்துணவு வழங்கப்படுகி றது . இதன் மூலம் 49 . 85 லட்சம் மாணவ மாணவிகள் பயன் பெறுகின்றனர் . ஏழை மாண வர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை காமரா ஜர் கொண்டு வந்தார் . எம் . ஜி . ஆர் . ஆட்சி காலத்தில் இது சத் துணவு திட்டமாக மாற்றப்பட் டது . கருணாநிதி முதல்வராக இருந்த போது சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது . அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளின் எண் பக்கை குறைந்து வருகிறது . இதை தடுக்கவும் . மாணவர்க ளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது . அதில் , மேலும் ஒரு நடவ டிக்கையாக அரசு பள்ளி மாண வ - மாணவிகளுக்கு காலை உணவு வழங்க திட்டமிடப் பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன .
இது குறித்து அதிகாரிகள் கூறியது சென்னை மாநகராட் சியில் உள்ள சுமார் 320 பள்ளிகளில் பயிலும் ஏறத்தாழ 85 ஆயி ரம் பள்ளி மாணவ , மாணவிக ளுக்கு காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவ ருகிறது . இந்தத் திட்டத்தில் இட்லி , தோசை , பொங்கல் , உப்புமா போன்ற உணவு வகை கள் காலை உணவாக தினமும் மாணவர்களுக்கு வழங்கப்படு கின்றன . சென்னையில் வெற்றி கரமாக நடைபெற்று வரும் இத் திட்டத்தை தமிழகம் முழுவ தும் விரிவுப்படுத்த அரசு திட்ட மிட்டுள்ளது . இந்தத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப் டுத்த ஆண்டுக்கு ரூ . 8 ஆயிரம் கோடி செலவாகும் . பள்ளிக் கல்வித்துறை , சமூகநலத்துறை ஆகிய துறைகளுடன் ஆலோ சிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக் கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகி றது .
இதையடுத்து இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக் கையின் போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர் . காலை உணவுத் திட்டத்தில் , தமிழகத்தின் பாரம்பரிய பச்சைப்பயிறு , கேழ்வரகு அடை குதிரைவாலி , சாமைக் கஞ்சி , கொண்டைக்கடலை போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உண வுகள் வழங்கப்படும் என்றும் , இதைத் தொடர்ந்து வரும் கல் வியாண்டிலிருந்தே காலை உணவுத் திட்டம் தமிழக அரசுப் பள்ளிகளில் செயலாக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது . இதனால் 65 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews