بحث هذه المدونة الإلكترونية
الأربعاء، فبراير 26، 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் எம்சிஏ, எம்பிஏ, எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான், போன்ற முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு 29ம் தேதியும் மார்ச் 1ம் தேதியும் நடக்கிறது. இதையடுத்து, மேற்கண்ட நுழைவுத் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்காக சென்னையில் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள தேர்வு மையத்தில் 27, 28ம் தேதிகளில் விசாரணை மையங்கள் செயல்படும்.இந்த மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களுக்கு பதில் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களை 044-22358314, 22358412 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
உதவியாளர் பணி தேர்வு மையங்கள் அறிவிப்பு:
தலைமை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில், உதவியாளர் பதவிக்கு ஆட்களை நியமனம் செய்வதற்கான, எழுத்து தேர்வு நடக்கும் மையங்களை, கூட்டுறவு துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரும், மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் தலைவருமான கோவிந்தராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பு:தலைமை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள், நேரடி நியமனம் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்து தேர்வு, மார்ச், 1ல், சென்னையில் மட்டும், ஒன்பது மையங்களில் நடைபெறும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மையங்கள் எங்கே?
* ஸ்டெல்லா மேரிஸ் கல்லுாரி, ஆர்.கே., சாலை * எத்திராஜ் கல்லுாரி, எழும்பூர்* அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லுாரி, அண்ணா நகர்* ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரி, அண்ணா நகர்* ஸ்ரீ கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, அண்ணா நகர்* ஸ்ரீ கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, வில்லிவாக்கம்* புது கல்லுாரி, ராயப்பேட்டை* அரசு ஆண்கள் கலை கல்லுாரி, நந்தனம்* டாக்டர் அம்பேத்கர் அரசு கலை கல்லுாரி, வியாசர்பாடி
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
எம்இ, எம்டெக் நுழைவுத் தேர்வு: சென்னையில் விசாரணை மையம்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.