பள்ளி படிப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் 5% இடஒதுக்கீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 10, 2020

Comments:0

பள்ளி படிப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் 5% இடஒதுக்கீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பள்ளிப் படிப்பை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம், ஹரூர் பெரியார் நகரை சேர்ந்த என்.முருகேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியில் பள்ளி படிப்பை முடித்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தமிழில் பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கு எந்த இடஒதுக்கீடும் தரப்படுவதில்லை. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 5,400 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதுவரை, 12ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி படித்தவர்கள் பெரும்பாலும் 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டில் பிளஸ்2 வரை தமிழ்வழியில் பள்ளிப் படிப்பை முடித்த 106 மாணவர்கள் மட்டுமே, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில் தெரியவந்துள்ளது.
தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தாவிட்டால் அவர்கள் ஆங்கில வழி படிப்பிற்கு மாற வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அதுமட்டுமல்லாமல், தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் படித்தவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்திவிடும். நீட் நுழைவுத் தேர்வில், தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள் மொழிச் சிறுபான்மையினர் என்பதால், தமிழ்வழி படித்த மாணவர்களின் நம்பிக்கையையும், நலனையும் பாதுகாக்க வேண்டும். இதுதொடர்பாக, நவம்பர் 2, டிசம்பர் 11 தேதிகளில் தமிழக முதல்வர், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர், தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர் ஆகியோருக்கு மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் வரும் பிப்ரவரி 20ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசு சுகாதாரத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, மருத்துவ கல்வி இயக்குனரகம் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 5% இடஒதுக்கீடு வழங்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 5% இட ஒதுக்கீடு கோரி முருகேசன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். தமிழக முதல்வர், தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு அளித்த கோரிக்கையில் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews