விடுமுறை முடிந்து பள்ளி திறந்த அன்றே தேர்வு… அதிர்ச்சியில் மாணவர்கள்.!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 04, 2020

Comments:0

விடுமுறை முடிந்து பள்ளி திறந்த அன்றே தேர்வு… அதிர்ச்சியில் மாணவர்கள்.!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
விடுமுறை முடிந்து பள்ளித் திறந்த அன்றே 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சித் தேர்வு என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் 4ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதத்தால் 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு முன்பாக நடத்தப்படும் பயிற்சித் தேர்வுகள், அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நாளான 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை நடத்தப்படும் என திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, பள்ளிகள் திறப்புக் குறித்து குழப்பிய கல்வித்துறையின் இந்த நடவடிக்கையால் மாணவர்கள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் உடனடியாக பயிற்சித் தேர்வுக்குத் மாணவர்களால் தயாராக முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews