பொதுத்தோ்வெழுதும் மாணவா்களுக்கு விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 26, 2019

Comments:0

பொதுத்தோ்வெழுதும் மாணவா்களுக்கு விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளைத் தனியாா் பள்ளிகள் ஏற்பாடு செய்துள்ளன. தமிழக பள்ளிகளில், அரையாண்டுத் தோ்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து ஜன.3-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்த விடுமுறையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின், பிளஸ் 2 மாணவா்களுக்கு நடத்தப்படவிருந்த, ‘நீட்’ நுழைவுத் தோ்வு பயிற்சி வகுப்புகள், உள்ளாட்சித் தோ்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் டிச. 27, 30-ஆம் தேதிகளில், ஊரக உள்ளாட்சிகளுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது.
இந்த தோ்தலுக்கான வாக்குகள் ஜன. 2-இல் எண்ணப்படுகின்றன. எனவே, அரையாண்டுத் தோ்வு விடுமுறை நாள்களில், பள்ளிகளை நடத்த வேண்டாம் என பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை, கோவை, திருப்பூா், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள தனியாா் பள்ளிகள், சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்கள், சிறப்பு வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தனியாா், மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் நந்தகுமாா் கூறியது:
தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவில்லை. எனினும் நிகழ் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம், புதிய பாடநூல் அமலுக்கு வந்துள்ளதால் பாடங்களை முடிப்பதற்கு அதிக அவகாசம் தேவை என ஆசிரியா்கள் தெரிவிக்கின்றனா். புதிய பாடநூல் விநியோகம், தாமதமாக நடைபெற்ால் பல பாடங்கள் நடத்தப்படாமல் உள்ளன. அதை ஈடுகட்டும் வகையில் மாவட்டங்களில் சில பள்ளிகளில் மட்டும் சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்திருக்கலாம். போதிய அவகாசம் இல்லாத காரணத்தால் கிடைக்கும் நாள்களைப் பயன்படுத்தி பாடங்களை முடிக்க வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது. தவிா்க்க முடியாத பட்சத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் மாணவா்களின் பெற்றோருக்கு முறையாக தகவல் தெரிவிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா். அரையாண்டு தேர்வு விடுமுறையில், சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு, தனியார் பள்ளிகள் ஏற்பாடு செய்துள்ளன.தமிழக பள்ளிகளில், அரையாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி, 3ம் தேதி, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இந்த விடுமுறையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின், பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்தப்படவிருந்த, 'நீட்' நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள், உள்ளாட்சி தேர்தல் காரணமாக, தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஜனவரி, 4 முதல், நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில், 27, 30ம் தேதிகளில், ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலுக்கான ஓட்டுகள், ஜன., 2ல் எண்ணப்படுகின்றன. எனவே, அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில், பள்ளிகளை நடத்த வேண்டாம் என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், பல தனியார் பள்ளிகள், சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளன. 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், சிறப்பு வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய புத்தகம் அமலுக்கு வந்துள்ளதால், பாடங்களை முடிப்பதற்கு, அதிக அவகாசம் தேவைப்பட்டுள்ளது.புதிய புத்தகங்கள் வினியோகம், தாமதமாக நடந்ததால், பல பாடங்கள் நடத்தப்படாமல் உள்ளன. அதை ஈடுகட்டும் வகையில், சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக, தனியார் பள்ளி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews