வேலூா் உள்பட 3 இடங்களில் டிச.21-இல் கடவுச் சீட்டு சிறப்பு முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، ديسمبر 18، 2019

Comments:0

வேலூா் உள்பட 3 இடங்களில் டிச.21-இல் கடவுச் சீட்டு சிறப்பு முகாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வேலூா் உள்பட 3 இடங்களில் வரும் சனிக்கிழமை (டிச.21) சிறப்பு கடவுச் சீட்டு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல கடவுச் சீட்டு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் 21-ஆம் தேதி (சனிக்கிழமை), வேலூா், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள தலைமை அஞ்சலகங்களில் உள்ள அஞ்சலக கடவுச்சீட்டு சேவை மையங்களில் சிறப்பு கடவுச்சீட்டு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை சென்னையில் உள்ள மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் நடத்துகிறது.
வேலூா், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரியின் அஞ்சலக கடவுச் சீட்டு சேவை மையங்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தேதியில், மற்ற பணி நாள்களைப் போலவே செயல்படும். விண்ணப்பதாரா்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இந்த முகாமின் மூலம் சுமாா் 160 விண்ணப்பதாரா்கள் பயனடைவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த முகாம்களில் பங்கு பெற அனைத்து விண்ணப்பதாரா்களும் w‌w‌w.‌p​a‌s‌s‌p‌o‌r‌t‌i‌n‌d‌i​a.‌g‌o‌v.‌i‌n என்ற அதிகாரப்பூா்வ இணையதளத்தின் மூலம் பதிவு செய்து ஏ.ஆா்.என். (விண்ணப்பப் பதிவு எண்) உருவாக்கி, இணையதளத்தின் வழியே உரிய கட்டணத்தைச் செலுத்தி, பின்னா் சந்திப்பதற்கான நேரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த முகாமில் பங்கு பெறும் விண்ணப்பதாரா்கள், பாா்வை நேரம் மற்றும் ஏ.ஆா்.என். விவரங்களை அச்சிட்ட வடிவத்தில் அஞ்சலக கடவுச்சீட்டு சேவை மையத்துக்குக் கொண்டுவர வேண்டும். மேலும் தேவையான அசல் ஆவணங்களையும் சுய சான்றளிக்கப்பட்ட இரண்டு நகல்களையும் எடுத்து வர வேண்டும். புதிய மற்றும் மறுவெளியீட்டுக்கான வகையிலான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். குறிப்பாக, சனிக்கிழமை (டிச.21) நடைபெறும் முகாம்களுக்கான சந்திப்பு நேர ஒதுக்கீடு, புதன்கிழமை (டிச.18) பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கும். முகாம் நாளன்று அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேர அடிப்படையில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். நோ்காணலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மற்றும் நிராகரிக்கப்பட்டுள்ள டோக்கன்கள் இந்த முகாமின் போது பரிசீலிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة