👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அஞ்சல் ஆயுள் காப்பீடு காலாவதியான பாலிசிகளை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று சென்னை பொது அஞ்சலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பு: அரசிதழ் அறிவிப்பின்படி தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேல் பிரீமியம் கட்டத்தவறிய, காலாவதியான மற்றும் முதிர்வு அடையாத பிஎல்ஐ, ஆர்பிஎல்ஐ பாலிசிகள் 2020ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியிலிருந்து புதுப்பிக்க இயலாது மற்றும் அந்த பாலிசிகள் விதிமுறைகளின்படி நிராகரிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும். ஒருமுறை நடவடிக்கையாக தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேல் பிரீமியம் கட்டத்தவறிய, காலாவதியான பாலிசிகள், கட்டுவதற்கான வாய்ப்பு 2019 டிசம்பர் 31ம் தேதி.
இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் நல்ல உடல்நிலையில் இருப்பதற்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்துடன் சென்னை பொது அஞ்சலகத்தை அணுகவும். மேலும் பாலிசி தொடங்கி 36 மாதங்கள் தொடர்ந்து கட்டப்பெறாத பாலிசிகள் காலாவதியாகியிருந்தால் டிசம்பர் 31க்குள் புதுப்பித்தால் மட்டுமே சரண்டர், முதிர்வு போது உரிமை மற்றும் இறப்பிற்கு பிறகு உரிமை ஆகிய பணப்பலன்களை பெற முடியும். காலாவதியான பாலிசிகள் முதிர்வு நாள் முன்னர் மட்டுமே புதுப்பிக்க இயலும். புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவம், சென்னை பொது அஞ்சலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தொடர்புக்கு 044- 25212549.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U