தேசிய வருவாய் வழி தேர்வு: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 24, 2019

Comments:0

தேசிய வருவாய் வழி தேர்வு: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'தேசிய வருவாய் வழி தேர்வுக்கு, 31ம் தேதிக்குள், விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும்' என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, டிச., 1ல் தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, செப்., 26ல் துவங்கியது; அக்., 11ல் முடிந்தது. இந்த விண்ணப்பங்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆன்லைன் வழியாக, அரசு தேர்வு துறைக்கு அனுப்ப வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. இந்த பதிவுக்கு, அக்டோபர், 16 வரை அவகாசம் தரப்பட்டது. அதன்பின், வரும், 31 வரை நீட்டிக்கப் பட்டது. கடைசி நாளுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால், விரைந்து விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். என்எம்எம்எஸ் உதவித்தொகைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 21-ஆம் தேதி முதல் பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவு செய்யலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய்தி: தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்காக என்எம்எம்எஸ் தேர்வு வட்டார அளவில் டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 11-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தற்போது விண்ணப்பித்தவர்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக அக்டோபர் 21 முதல் 31-ஆம் தேதி வரை பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பள்ளி தலைமையாசிரியர்கள் தாமதமின்றி பணிகளை முடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews