பல்கலையில் போலி பணி நியமன உத்தரவு:ஊழியருக்கு நோட்டீஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 01, 2019

Comments:0

பல்கலையில் போலி பணி நியமன உத்தரவு:ஊழியருக்கு நோட்டீஸ்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை காமராஜ் பல்கலையில் போலி நியமன உத்தரவுடன் பணியில் சேர வந்த இளைஞர் சிக்கினார். இதில் தொடர்புடைய பல்கலை ஊழியர் பார்த்தசாரதிக்கு நோட்டீஸ் அளித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பரமத்தோப்பை சேர்ந்த ராமர் மகன் ராம்குமார், பயோ டெக்னாலஜி துறைக்கு சென்று லேப் டெக்னீஷியன் பணிக்கான நியமன உத்தரவை அளித்தார். அந்த உத்தரவில் மாஜி பதிவாளர் சின்னையா பெயர் இடம் பெற்றிருந்தது. தற்போது பதிவாளர் (பொறுப்பு) சுதா உள்ளதால் அவரை சந்தித்து விட்டு வரும்படி அங்கிருந்த அலுவலர்கள் தெரிவித்தனர்.தற்போதைய பதிவாளரை ராம்குமார் சந்தித்த போது அந்த உத்தரவு போலியானது என தெரிய வந்தது. அவரிடம் விசாரித்தபோது, 'இப்பணிக்காக பல்கலை எஸ்.சி.எஸ்.டி., மைய ஊழியர் (எஸ்.டபுள்யு.ஜி.,) பார்த்த சாரதி 3 லட்சம் ரூபாய் பெற்று இந்த உத்தரவை வழங்கி, பணியில் சேர அறிவுறுத்தினார்' என கூறினார். சம்மந்தப்பட்ட பார்த்தசாரதி தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார். இத்தகவல் துணைவேந்தர் கிருஷ்ணனிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவசர சிண்டிகேட் கூட்டம் அவரது தலைமையில் நடந்தது. உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, தீனதயாளன், ராமகிருஷ்ணன், பாரி பரமேஸ்வரன், ராஜ்குமார், பதிவாளர் சுதா பங்கேற்றனர்.கூட்டத்தில் பார்த்தசாரதிக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை மேற்கொள்வது, அவரது மருத்துவ விடுப்பின் உண்மை தன்மை ஆய்வு செய்வது ஆகிய அவசர முடிவுகள் எடுக்கப்பட்டன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews