தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 23, 2019

Comments:0

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல். New Medical Colleges in Tamil Nadu: தமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய இடங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிக்கும் 325 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 ஆயிரத்து 250 மாணவ, மாணவிகள் படித்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது தமிழகத்துக்குப் புதிதாக மேலும் ஆறு மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கான தொழில்நுட்ப ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், நாடு முழுவதும் 31 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கலாம் என்று முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், புதிய மருத்துவக்கல்லூரிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், ஆறு இடங்களில் மருத்துவக்கல்லூரிகளில் தொடங்க முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கான அடுத்தகட்ட ஒப்புதலை மத்திய சுகாதாரத்துறை வழங்கியுள்ளது. மேலும், நிதி ஒதுக்கீடு விபரங்களும் வெளிவந்துள்ளது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிக்கும் தலா 325 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் தலா 195 கோடி ரூபாயும், மாநில அரசு சார்பில் தலா 130 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய மருத்துவக்கல்லூரிகள் இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய மருத்துவக்கல்லூரிகளால், தமிழகத்தில் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை உயரும். இதனால், மருத்துவப்படிப்பிற்கான இடங்களும் அதிகரிக்கும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews