Search This Blog
Tuesday, October 22, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய நீர்வளஅமைச்சகத்தின் சார்பில் வழங்கப்படும் தேசிய நீர் விருதுகளுக்கு வரும் நவ.30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி: மக்களிடம் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தண்ணீரை சிறப்பாகப் பயன்படுத்தும் வகையிலும், இரண்டாவது தேசிய நீர் விருதுகள் 2019 வழங்கப்படவுள்ளன. மத்திய நீர்வள அமைச்சகம் இந்த விருதுகளை நிறுவியுள்ளது.
தண்ணீர் சிக்கனம் மற்றும் சேமிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்படும், சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம் (நதி உயிர்ப்பு, தண்ணீர் சேமிப்பு ஆகிய இருபிரிவுகள்) சிறந்த கிராம ஊராட்சி, சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி, தண்ணீர் பாதுகாப்பில் புதிய தொழில்நுட்பம், சிறந்த ஆராய்ச்சி, சிறந்த பயிற்றுவிப்பு மற்றும் மக்கள் விழிப்புணர்வு முயற்சிகள், தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி, சிறந்த செய்தி ஏடு (ஹிந்தி, ஆங்கிலம், பிராந்திய மொழி ஏடுகள்) சிறந்த பள்ளி, சிறந்த நிறுவனம், சிறந்த குடியிருப்பு நலச்சங்கம், சிறந்த தொழிற்சாலை (பெருந்தொழில், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஆகிய இரு பிரிவுகள்), சிறந்த நீர் ஒழுங்காற்று ஆணையம், நீர் வீரர்கள் (5 மண்டலங்களுக்கு தலா 3 ரொக்கப்பரிசுகள்), சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், சிறந்த தண்ணீர் பயன்பாட்டு சங்கம், தண்ணீர் சேமிப்பில் சமுதாயப் பொறுப்புணர்வுடன் கூடிய சிறந்த தொழிற்சாலை ஆகிய 16 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நவ.30-ஆம் தேதி ஆகும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.mowr.gov.in, www.cgwb.gov.in ஆகிய வலைதளங்களைப் பார்க்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
தேசிய நீர் விருதுகள்: விண்ணப்பிக்க நவ.30 கடைசி: மத்திய நீர்வள அமைச்சகம் தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.