Search This Blog
Tuesday, September 24, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வரும் 3ம் தேதி முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு கடந்த ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அரசு, அரசு உதவி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. தற்போது அரசு, அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. இதையடுத்து காலாண்டு தேர்வு முடிந்து வரும் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்போது பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமலுக்கு வர உள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காலாண்டு விடுமுறை முடிந்து வரும் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்போது சுமார் 6 ஆயிரத்திற்கும் மேலாக உள்ள அரசு, அரசு நிதியுதவி நடுநிலைப்பள்ளிகளில் ஆதார் எண் இணைந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறையில் இருக்கும். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆசிரியர்களுக்கு 12 இலக்க ஆதார் எண்ணில் கடைசி 8 எண்கள் அடையாளமாக வழங்கப்படும். அந்த எண் மற்றும் கைரேகையை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்போது பயோமெட்ரிக் கருவியில் பதிவு செய்ய வேண்டும். இதைதொடர்ந்து, நவம்பர் மாதத்தில் தொடக்கப்பள்ளிகளுக்கும் பயோமெட்ரிக் முறை அமலுக்கு கொண்டு வரப்படும்’ என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
BEO/DEE
BIO METRIC
ஆசிரியர், பணியாளர்களுக்கு நடுநிலைப்பள்ளிகளில் அக்.3 முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமல்
ஆசிரியர், பணியாளர்களுக்கு நடுநிலைப்பள்ளிகளில் அக்.3 முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.