Search This Blog
Tuesday, September 24, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காலாண்டு தேர்வுகள் முடிந்ததை அடுத்து, இன்று முதல் அக்டோபர் 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிப்போருக்கு பருவத் தேர்வுகளும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகளும் கடந்த 12ம் தேதி தொடங்கின. நேற்றுடன் தேர்வுகள் முடிந்தன. இதையடுத்து, அக்டோபர் 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் வேறு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனால், பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு பயிற்சி வகுப்புகள் நடக்கும்.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் 480 மையங்களில் 22ம் தேதி தொடங்கி உள்ளது. இந்த பயிற்சிக்கு பதிவு செய்துள்ள மாணவ, மாணவியர் மட்டும் அந்த வகுப்புகளில் பங்கேற்பார்கள். இதற்கிடையே, மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தை கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து, மாவட்ட அளவில் மாணவர்களுக்கு போட்டி நடக்கும் என்று சமக்ர சிக்ஷா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், இன்றுடன் காலாண்டு தேர்வு முடிகிறது. நாளை முதல், ஒன்பது நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், மூன்று பருவ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும், முதல் பருவ தேர்வான காலாண்டு தேர்வு, செப்., 12ல் துவங்கியது. மொழி பாடங்கள், முக்கிய பாடங்கள் மற்றும் இணை படிப்புகள் உள்ளிட்ட அனைத்துக்கும், தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இன்றுடன், அனைத்து தேர்வுகளும் முடிகின்றன. இதை தொடர்ந்து, நாளை முதல், அக்., 2 வரை, ஒன்பது நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.காந்தி ஜெயந்தி, அக்., 2ல் கொண்டாடப்படும் நிலையில், பள்ளிகள் திறக்கும், அக்., 3ல் காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, இம்மாதம், 30ம் தேதியில் இருந்து, முதல் பருவ தேர்வுகள் துவங்க உள்ளன. இடைபட்ட நாட்களில், காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன்பின், அக்டோபர், 25 முதல், முதல் பருவ தேர்வுக்கான விடுமுறை விடப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
பள்ளிகளுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.