‘சிபிஎஸ்இ தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்’ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 14, 2019

‘சிபிஎஸ்இ தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்’

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சிபிஎஸ்இ தேர்வு கட்டண உயர்வுக்கு மாயாவதி எதிர்ப்பு ‘தேர்வு கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ள சிபிஎஸ்இ, அதனை திரும்ப பெற வேண்டும்,’ என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் உள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ கடந்த வாரம் திடீரென அறிவித்தது.இந்நிலையில், இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில், `எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்கள், பொதுப்பிரிவினரின் தேர்வு கட்டணத்தை சிபிஎஸ்இ இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளது. இது மிகவும் துரதிருஷ்டமானது. இது இனவெறி, ஏழைகளுக்கு எதிரான முடிவு. சிபிஎஸ்இ இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும்,’ என்று கூறி யுள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சிபிஎஸ்இ 10ம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்களின் தேர்வு கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக எஸ்சி, எஸ்டி மாணவர்களின் தேர்வு கட்டணத்தை 50லிருந்து 1200 ஆகவும், பொதுப்பிரிவு மாணவர்களின் தேர்வு கட்டணத்தை 750லிருந்து 1500 ஆகவும் உயர்த்தியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படி பன்மடங்கு உயர்த்தினால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிள்ளைகளை படிக்க வைக்கின்ற பெற்றோர்களுக்கு பொருளாதார சுமை ஏற்படும்.மேலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் தேர்வு கட்டணத்தை ஒரே சமயத்தில் 24 மடங்கு அதிகமாக உயர்த்தியிருப்பது ஏற்புடையதல்ல. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews