மாணவியை தாக்கிய அரசுப்பள்ளி ஆசிரியை தற்காலிகமாக பணிநீக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 27, 2019

மாணவியை தாக்கிய அரசுப்பள்ளி ஆசிரியை தற்காலிகமாக பணிநீக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே 5-ம் வகுப்பு மாணவியை தாக்கிய அரசுப்பள்ளி ஆசிரியை தேவி தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வகுப்பறை சாவியை தொலைத்ததால் ஆசிரியை கடுமையாக தாக்கியதில் காயமடைந்த மாணவி லத்திகா மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே புளியரணங்கோட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை சுத்தம் செய்ய பணியாளர் யாரும் நியமிக்கப்படவில்லை. அதனால், பள்ளிக் குழந்தைகளே பள்ளி வளாகத்தையும், வகுப்பறைகளையும் அன்றாடம் சுத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை வகுப்பறையை சுத்தம் செய்யச் சொல்லி 5-ஆம் வகுப்பு மாணவி லத்திகாவிடம் தலைமை ஆசிரியை தேவி சாவியை கொடுத்துள்ளார். அந்த சாவியை மாணவி தொலைத்ததால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை மாணவியை கம்பால் தாக்கியுள்ளார். காயமடைந்த மாணவியை மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் அந்த தலைமை ஆசிரியை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை தாக்கி 5-ம் வகுப்பு மாணவி காயமடைந்துள்ளார். புளியரணகோட்டை கிராமத்தில் மாணவி லத்திகா வகுப்பறை சாவியை தொலைத்ததாக கூறி தலைமை ஆசிரியை தேவி தாக்கியுள்ளார். தேவி தாக்கியதில் காயம் அடைந்த மாணவி லத்திகா மதுராந்தகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews