பிஇ நேரடி இரண்டாம் ஆண்டு... குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 05, 2019

பிஇ நேரடி இரண்டாம் ஆண்டு... குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிஇ நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 20 சதவீதம் ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வருவதால் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிடெக்னிக், பி.எஸ்சி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் பி.இ. நேரடி 2ம் ஆண்டில் சேரலாம். தமிழகத்தில் உள்ள 547 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தது. காரைக்குடி அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டுக்கான கவுன்சலிங் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் 12021 விண்ணப்பங்கள் ரிஜிஸ்டர் செய்யப்பட்டதில் 11447 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் அழைப்பு விடுக்கப்பட்ட 11447 பேரில் 1963 பேர் ஆப்சென்ட். மீதம் உள்ள 9521 பேருக்கு அலாட்மென்ட் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 90064 இடங்களில் அலாட்மென்ட் ஆர்டர் பெற்ற 9521 பேர் போக மீதம் 80543 இடங்கள் காலியாக இருந்தன. கடந்த 2 ஆண்டுகளாக மூன்றாம் பாலினம் அட்மிஷன் இல்லாத நிலையே உள்ளது. பிஎஸ்இ முடித்தவர்கள் பி.இ சேருவதும் குறைந்து வருகிறது.
ஒவ்வொரு வருடமும் நேரடி இரண்டாம் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு என ஒதுக்கப்படும் இடங்களில் 60 முதல் 70 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ள நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல் சேர்க்கைக்கு ஒதுக்கப்பட்ட 20 சதவீதத்தை 10 சதவீதமாக குறைத்துள்ளனர். இதன்படி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தநிலையில் இனி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் மட்டும் ஒதுக்கப்படும். இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 460 க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து முடித்து வெளியே வருவார்கள். இதில் வேலைக்கு சென்றவர்கள் போக உயர்கல்வி படிக்க அதிகஅளவில் மாணவர்கள் வர வேண்டும். ஆனால் அதுபோல் வருவது கிடையாது. தவிர வேலைவாய்ப்பை பொறுத்தவரை பாலிடெக்னிக் முடித்து நேரடி இரண்டாமாண்டில் பி.இ படித்து முடிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதனால் பிளஸ் 2 முடித்து முதலாமாண்டு முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகிறது. இதனை கருத்தில் கொண்டு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கை உயர்த்த வேண்டும் என்பதற்காக 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்துள்ளதாக கூறப்படுகிறது என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews