👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக மாணவியின் பெற்றோர், கோயம்புத்தூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் பூசாரிப்பாளையத்தை சேர்ந்த யுரேகா, தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி தற்கொலை செய்துக்கொண்டார். குத்துச்சண்டையில் தேசிய அளவில் வெற்றி பெற்று வந்தவரை, விளையாட்டு ஆசிரியர் பாலமுருகன், முதல்வர் சிவக்குமார், ஆகியோர் தொடர்ந்து விளையாட அனுமதிக்காததுடன், மன உளைச்சல் அடையும் அளவுக்கு செயல்பட்டதாக கூறப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் மாணவி யுரேகா என்பதால், ஆசிரியர்கள் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துக்கொண்டதாகவும், இதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தாய், முதலமைச்சரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U