அண்ணா பல்கலை மீது மனித உரிமை ஆணையத்தில் புகார்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 06, 2019

அண்ணா பல்கலை மீது மனித உரிமை ஆணையத்தில் புகார்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தேர்வு முறைகேடு விவகாரத்தில், ஆசிரியர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதாகக் கூறி அண்ணா பல்கலைக் மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில், பொறியியல் கூட்டமைப்பு புகார் அளித்துள்ளது. 2017-18ஆம் கல்வியாண்டில் நடந்த தேர்வு முறைகேடுக்கு உதவி செய்ததாகக் கூறி, தனியார் கல்லூரி விரிவுரையாளர், கல்லூரி முதல்வரை அண்ணா பல்கலைக்கழகம் பணி நீக்கம் செய்தது. அந்த இரு ஆசிரியர்களுக்கு பணி தரக் கூடாது என கல்லூரி முதல்வர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கடிதம் எழுதியிருந்தார்.
click here to watch the video இதற்கு எதிராக தனியார் பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு, தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் கார்த்தி அளித்த புகார் மனுவில், 2 ஆசிரியர்களின் புகைப்படம், பான் எண், அண்ணா பல்கலை கழகத்தின் பணியாளர் எண் உள்ளிட்ட விபரங்களுடன் அவர்களை வேறு கல்லூரியில் சேர்க்க கூடாது என பதிவாளர் கடிதம் எழுதியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. பதிவாளரின் இந்த செயல் தனிப்பட்ட இருவரை மட்டும் அல்லாமல் அவர்களின் குடும்பம், உறவினர்களையும் பாதித்துள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுடன், பாதிக்கப்பட்ட இருவருக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பொறியியல் கல்லூரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews