👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
விழுப்புரம், கள்ளக்குறிச்சி தொகுதியில் 7 ஆயிரம் தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆட்சியரிடம் திமுக புகார் அளித்துள்ளது. மேலும் தபால் வாக்கு விண்ணப்பங்கள் நிறுத்திவைக்கப்பட்டதில் ஆளுங்கட்சி தலையீடு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 18ந் தேதி தேர்தல் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 2 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ரவிக்குமார், பாமக வேட்பாளர் வடிவேல்ராவணன் உள்ளிட்ட 13 பேர் போட்டியிடுகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கவுதமசிகாமணி, அமமுக கோமுகி மணியன் உள்பட 24 பேர் போட்டியிட்டனர். மாவட்டம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் போட அறிவுறுத்தப்பட்டிருந்தன. இதன்படி, 15,900 பேர் தபால் வாக்கு போட தகுதியுள்ளவர்களாக கூறப்பட்டது. அதேபோல் காவல்துறையில் 2,300 பேர் தபால் வாக்கு போட விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்த நிலையில் இதுவரை விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் 3 ஆயிரம் தபால் வாக்குகள் வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் கள்ளக்குறிச்சித் தொகுதியில் 4 ஆயிரம் பேருக்கு தபால் வாக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. இனிமேல் யாரிடம் சென்று கேட்பது என ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் புலம்பி வருகின்றனர். அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ பொன்முடி ஆட்சியரை சந்தித்து புகார் மனுவும் அளித்தார். அதில், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் 7 ஆயிரம் பேருக்கு தபால் வாக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. இது அதிகாரிகள் கொடுத்த புள்ளிவிவரம். எனவே தபால் வாக்கு விண்ணப்பங்களை விரைந்து வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். விழுப்புரம் தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றிவாய்ப்பு அமையும் என்பதால் இதில் தபால் வாக்கு விண்ணப்பங்கள் நிறுத்திவைக்கப்பட்டதில் ஆளுங்கட்சி தலையீடு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U