👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
முதுநகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி துவக்க விழா நடந்தது.கடலுார் துறைமுகம் துாய தாவீது மேனிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், முதுநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள பின் தங்கிய படித்த மகளிருக்கு டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி துவக்க விழா நடந்தது.சங்க பொருளாளர் கந்தசாமி வரவேற்றார். தலைவர் சேஷாத்திரி தலைமை தாங்கினார்.
தலைமையாசிரியை கோமதி குத்து விளக்கேற்றி, அதிக மதிப்பெண்கள் பெற்ற 6 முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். மூத்த வழக்கறிஞர் அருணாச்சலம் சங்கத்தின் வலைதளத்தினை தொடங்கி வைத்து பேசினார். கவுரவத் தலைவர் பத்மநாபன் திருக்குறள் புத்தகம் வழங்கி பேசினார்.டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வு பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு பயிற்சி ஆசிரியர்கள் வேல்முருகன், முருகபாண்டியன் அறிவுரை வழங்கி பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தனர்.துணைத் தலைவர்கள் ராஜூ, சுந்தரம், முகமது முஸ்தபா, இணை செயலாளர்கள் ஜெயசுந்தரன், புனிதவதி, சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U