பள்ளி ஆய்வில் அதிகாரிகள் வசூல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 29, 2019

பள்ளி ஆய்வில் அதிகாரிகள் வசூல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பள்ளிகளுக்கு அங்கீகாரம் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் அதிகாரிகள், கட்டாய வசூல் வேட்டை நடத்துவதாக, தாளாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் செயல்படும் பள்ளிகளுக்கு, அரசின் அங்கீகாரம் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும்படி, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை நடப்பதை தடுக்க வேண்டும் என்றும், கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இந்த உத்தரவின் அடிப்படையில், பள்ளிகளுக்கு ஆய்வுக்கு செல்லும், வட்டார கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும், சி.இ.ஓ.,க்களில் சிலர், தனியார் பள்ளிகளில் வசூல் வேட்டை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிகாரிகள் வரும் காருக்கு வாடகை, டீசல் கட்டணம், உணவு செலவு, 2,000 முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பதாக, பள்ளி தாளாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அங்கீகாரம் இருக்கும் பள்ளிகளிடமே, இந்த வசூல் வேட்டையை நடத்துகின்றனராம்.மேலும், சி.பி.எஸ்.இ., தற்காலிக ஆவண சான்றிதழ்கள் உள்ளிட்ட, பள்ளி ஆவணங்களை படிக்க தெரியாமல், ஆய்வு அதிகாரிகள் திணறுகின்றனர். இப்படி திணறும் பல அதிகாரிகள், தங்கள் அதிகாரத்தை காட்டுவதற்காக, ஏதாவது ஒரு ஆவணம் இல்லை எனக்கூறி, பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews