தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் எந்தவொரு பள்ளியும் இயங்கக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 10, 2019

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் எந்தவொரு பள்ளியும் இயங்கக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, வரும் கல்வி ஆண்டு முதல் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர்கள் பயில்வதை தடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில் கல்வித்துறை இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் தங்கள் மாவட்டத்தில் உள்ள அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளை வட்டார கல்வி அலுவலர்கள் கண்டறிய வேண்டும். அவ்வாறு கண்டறியும் பள்ளிகளின் விவரங்களை செய்தித்தாள்கள் வாயிலாக விளம்பரப்படுத்த வேண்டும்.
மேலும் பள்ளி வாயிலில் பெற்றோர்கள் மாணவர்கள் அறிந்திடும் வகையில் அங்கீகாரம் இல்லாத பள்ளி என்று அறிவிப்பு பலகை வைக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதை பள்ளி கல்வி இயக்குநகரகம் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. அடுத்த மாதம் 25-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெறாத பள்ளிகள் குறித்த அனைத்து விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறையிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரசின் உரிய அங்கீகாரத்தை பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் மெட்ரிக், சிபிஎஸ்இ உள்ளிட்ட 366 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இப்பள்ளிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.
பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு 2 மாத கால அவகாசம் கொடுத்திருந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை தற்போது மீண்டும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள், பிற கல்வி வாரியங்களில் இணைப்பு பெற்ற பள்ளிகள் அரசின் அங்கீகரத்தை பெற்றே இயங்க வேண்டும் என்றும், இதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளை கண்டறிந்து அதன் விவரங்களை பள்ளியின் முகப்பில் ஒட்டப்பட வேண்டும் எனவும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews