வருமானவரி அலுவலகங்கள் இன்றும், நாளையும் செயல்படும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 30, 2019

வருமானவரி அலுவலகங்கள் இன்றும், நாளையும் செயல்படும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், வருமானவரி அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலத்தின், கூடுதல் ஆணையர், ஆர்.இளவரசி வெளியிட்ட செய்திக் குறிப்பு:கடந்த, 2017 - 18ம் நிதி ஆண்டுக்கு, வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நாளை நிறைவடைகிறது.கணக்கு தாக்கல் செய்ய வசதியாக, இன்றும், நாளையும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, வருமானவரி அலுவலகங்கள், வழக்கம் போல் செயல்படும்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், இந்த அலுவலகத்தை பயன்படுத்தி, கணக்கு தாக்கல் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.பத்திர பதிவு அலுவலகம்தனியார் நிறுவனங்கள், நிதியாண்டு இறுதியில், சொத்து பரிமாற்றங்களை மேற்கொள்வது வழக்கம்.நடப்பு நிதியாண்டின் நிறைவான, மார்ச், 30, 31 ஆகிய இரு நாட்களும், விடுமுறை நாட்களாக உள்ளதால், சொத்து பரிமாற்றங்களை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, பதிவுத்துறை, சொத்து பரிமாற்றங்கள் நடக்க வசதியாக, விடுமுறை நாளான இன்று, சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும் என, அறிவித்துஉள்ளது.ஆனால், விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பதிவுக்கும், 200 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என, பதிவுத்துறை அறிவித்துள்ளது.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews