பாடத் திட்டம் எழுதவில்லை, பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள் - CEO எச்சரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 11, 2018

பாடத் திட்டம் எழுதவில்லை, பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள் - CEO எச்சரிக்கை

பாடத் திட்டம் (நோட்ஸ் ஆப் லெசன்) எழுதாமல் வந்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்ட ஆப்பரேஷன் இ' ஆய்வு குழு *மதுரை பள்ளிகளில் நடந்த 'ஆப்பரேஷன்-இ' ஆய்வில் தீபாவளி கொண்டாடிய ஆசிரியர் பலர் பாடத் திட்டம் எழுதாமல் வந்தது தெரிந்தது* *நவ.,1 முதல் ரெகுலர் சி.இ.ஓ., பணியிடம் காலியாக உள்ளது* *மாவட்ட கல்வி அலுவலர் அமுதா சி.இ.ஓ., பொறுப்பு வகிக்கிறார்* *சி.இ.ஓ., இல்லாததால் 'ஆப்பரேஷன் இ' திட்டம், பள்ளி செயல்பாடுகள் சுணக்கமாக உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது*
*இதன் எதிரொலியாக நிறுத்தி வைக்கப்பட்ட 'ஆப்பரேஷன் இ' ஆய்வு, அமுதா தலைமையில்* *10 குழுக்கள் தெற்கு* *கல்வி ஒன்றிய* *பள்ளிகளில் ஆய்வு நடத்தின* *ஈ.வெ.ரா., பள்ளியில் தாமதமாக வந்த ஆசிரியர் சிலர் வருகை பதிவில் முன் நேரமிட்டு கையெழுத்திட்டது தெரிந்து எச்சரிக்கப்பட்டனர்* *உமறுபுலவர் பள்ளியில் மாணவர் கவனத்தை ஈர்த்து கணிதம் நடத்திய ஆசிரியர் பாராட்டப்பட்டார்* *தீபாவளி கொண்டாடிய ஆசிரியர் பலர், பாடத் திட்டம் (நோட்ஸ் ஆப் லெசன்) எழுதாமல் வந்தனர். அவர்களை குழு எச்சரித்து விளக்கம் கேட்டது*
*அதிகாரி ஒருவர் கூறுகையில், "பெரும்பாலும் மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வு நடந்தது* *மாணவரின் கணிதம், ஆங்கிலம் வாசிப்பு திறன் குறைவாக இருந்தது* *சுகாதாரமும் சிறப்பாக இல்லை* *நவ.,க்குள்* *வாசிப்பு திறனை அதிகரிக்க ஆசிரியர்* *உறுதியளித்தனர்* *மாநகராட்சி* *அதிகாரிகள் பள்ளிகளை அடிக்கடி* *கண்காணித்து* *குறைகளை சரி செய்ய வேண்டும்"என்றார்*
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews