ஆசிரியர் தின விழாவில் அமைச்சர் பேச்சு : அரசுப்பள்ளியில் வசதியில்லாததால் தனியார் பள்ளிக்கு செல்கின்றனர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 25, 2018

ஆசிரியர் தின விழாவில் அமைச்சர் பேச்சு : அரசுப்பள்ளியில் வசதியில்லாததால் தனியார் பள்ளிக்கு செல்கின்றனர்

கிராமப்பகுதிகளில் அரசு பள்ளிகள் அடிப்படை வசதியில்லாமல் உள்ளன. அதனால் தான் மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கி செல்கிறார்கள் என அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆசிரியர் தினவிழா நடந்தது கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார் விழாவில் கதர் மற்றும் கிராமத்தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது பெரும்பாலும் கிராமப்பகுதிகளில் அரசு பள்ளிகள் அடிப்படை வசதியில்லாமல் உள்ளன அதனால் தான் மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கி செல்கிறார்கள். பள்ளிகளுக்கு என்ன தேவை என ஆசிரியர்கள் கூற வேண்டும்
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த மழை நேரத்திலும் வறட்சியாகத்தான் உள்ளது. குடிநீருக்கே பிரச்னை என்றால் எப்படி விவசாயம் பார்ப்பது? புயலாவது அடிக்குமா என எதிர்பார்த்தோம். நமது மாவட்ட எல்லையை தாண்டி பொன்னமராவதி சென்றால் அங்கு கண்மாய்கள் நிறைந்துள்ளன மனுநீதிநாள் முகாம்களில் 45, 50 வயதுடையவர்கள்கூட முதியோர் பென்ஷன் கேட்டு மனு கொடுக்கின்றனர். உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே இல்லை. இவ்வாறு அவர் பேசினார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews