உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 25 ( October 25 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 25, 2018

உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 25 ( October 25 )



அக்டோபர் 25 ( October 25 )
கிரிகோரியன் ஆண்டின் 298 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 299 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 67 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
473 – பேரரசர் முதலாம் லியோ தனது பெயரன் இரண்டாம் லியோவை பைசாந்தியப் பேரரசின் சீசராக நியமித்தார்.
1147 – செல்யூக்குகள் செருமானிய சிலுவை வீரர்களை டொரிலெயம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.
1147 – நான்கு மாத முற்றுகையின் பின்னர் முதலாம் அபொன்சோ என்றிக்கசு தலைமையில் சிலுவை வீரர்கள் லிஸ்பன் நகரை மோளக் கைப்பற்றினர்.
1415 – நூறாண்டுப் போர்: அஜின்கோர்ட் சமரில்
இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியின்
காலாட் படையினரும்,
விற்படையினரும் பிரான்சின்
குதிரைப்படைகளைத் தோற்கடித்தனர்.

1616 – அவுஸ்திரேலியாவில் கால்பதித்த இரண்டாவது
ஐரோப்பியர் என்ற பெயரை டச்சு கப்டன் டேர்க் ஆர்ட்டொக் பெற்றார்.
மேற்கு அவுஸ்திரேலியாவில் டேர்க் ஆர்ட்டொக் தீவு அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
1760 – மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடிசூடினார்.
1900 – ஐக்கிய இராச்சியம் திரான்சுவால் குடியேற்றத்தை (இன்றைய தென்னாப்பிரிக்காவில்) இணைத்துக்கொண்டது.
1917 – உருசியாவில் அக்டோபர் புரட்சி (பழைய யூலியன் நாட்காட்டியின் படி), இடம்பெற்றது.
போல்செவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.
1920 – இங்கிலாந்தின் பிரிக்சுடன் சிறையில் 74 நாட்கள்
உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சின் பெயின் கோர்க் பிரபு டெரன்சு மெக்சுவீனி இறந்தார்.
1924 – இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் பிரித்தானியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
1927 – இத்தாலியப் பயணிகள் கப்பல்
பிரின்சிபெசா மபால்டா
பிரேசிலில் மூழ்கியதில் 314 பேர் உயிரிழந்தனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் டாங் என்ற நீர்மூழ்கிக் கப்பல் கப்பலில் இருந்த
நீர்மூழ்கிக் குண்டு வெடித்ததில் மூழ்கியது.
1944 – இரண்டாம் உலகப் போர்:
பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவுக்கும்
சப்பானுக்கும் இடையில் வரலாற்றில் பெரும் கடற்சமர் இடம்பெற்றது.
1945 – சப்பான் கூட்டு நாடுகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து சீனக் குடியரசு தாய்வானை இணைத்துக் கொண்டது.
1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: சோவியத் ஏவுகணைகள் கியூபாவில் உள்ளதைக் காட்டும் புகைப்படங்கள்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் காண்பிக்கப்பட்டன.
1971 – ஐநாவிலிருந்து சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு
மக்கள் சீனக் குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1973 – இசுரேல்-எகிப்து இடையிலான யோம் கிப்பூர்ப் போர் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.
1983 – கிரெனடா பிரதமரும் அவரது ஆதரவாளர்கள் பலரும் இராணுவப் புரட்சியை அடுத்துத் தூக்கிலிடப்பட்ட ஆறாவது நாள்
ஐக்கிய அமெரிக்காவும் அதன்
கரிபியன் கூட்டு நாடுகளும்
கிரெனாடாவை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றின.
1995 – அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் தொடருந்து ஒன்று மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்றுடன் மோதியதில் ஏழு மாணவர்கள் உயிரிழந்தனர்.
1995 – கொழும்பு கொலன்னாவை
எண்ணெய்க் குதங்களில் இடம்பெற்ற பெரும் தீயில் 21 படையினர் கொல்லப்பட்டனர்.

1997 – உள்நாட்டுப் போரை அடுத்து அரசுத்தலைவர் பாசுக்கால் லிசூபா பிராசவில்லி நகரை விட்டு வெளியேறியதை அடுத்து டெனிசு இங்குவேசோ காங்கோ குடியரசின் அரசுத்தலைவராகத் தன்னை அறிவித்தார்.
2000 – பிந்துனுவேவா படுகொலைகள் : இலங்கையில்
பண்டாரவளை, பிந்துனுவேவா சிறைகள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதலில் தமிழ் அரசியல் கைதிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
2001 – விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.
2001 – இந்தியாவில் தடா சட்டத்துக்கு பதிலாக போட்டோ என்ற புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ்
விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 23 தீவிரவாத அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது.
2007 – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது இரட்டை அடுக்கு விமானம் ஏர்பஸ் ஏ380 தனது முதலாவது சேவையை சிட்னிக்கு ஆரம்பிக்கிறது.
2009 – பகுதாது நகரில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
2017 – சீனப் பொதுவுடமைக் கட்சியின் 19-வது தேசியப் பேராயத்தில் சீ சின்பிங் இரண்டாவது தடவையாக கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறப்புகள்

1789 – சாமுவேல் சுகுவாபே , செருமனிய வானியலாளர் (இ. 1875 )
1806 – மக்சு இசுரேனர் , செருமானிய மெய்யியலாளர் (இ.
1856 )
1811 – எவரிஸ்ட் கால்வா , பிரான்சியக் கணிதவியலாளர் (இ.
1832 )
1881 – பாப்லோ பிக்காசோ , எசுப்பானிய ஓவியர், சிற்பக் கலைஞர் (இ. 1973 )
1912 – மதுரை மணி ஐயர் , கருநாடக இசைப் பாடகர் (இ. 1968 )
1929 – ஜார்ஜ் பீல்டு , அமெரிக்க வானியற்பியலாளர்
1939 – எம். வி. விஷ்ணு நம்பூதிரி, மலையாள நாட்டுப்புறவியலாளர்
1950 – ராமபத்ராச்சார்யா , இந்திய குரு, கல்வியாளர், சமற்கிருத அறிஞர், பன்மொழியாளர்
1955 – சுப்ரபாரதிமணியன் , தமிழக எழுத்தாளர்
1984 – கேட்டி பெர்ரி , அமெரிக்கப் பாடகி, நடிகை
1893 – செ. நாகலிங்கம் , இலங்கை நீதிபதி (இ. 1958)
1953 – வதிரி. சி. ரவீந்திரன் , இலங்கை எழுத்தாளர்
1972 – எஸ்தர் டுஃப்லோ , பிரான்சியப் பொருளாதார அறிஞர்
1973 – றசல் பிரேமகுமாரன் ஆர்னோல்ட் , இலங்கை துடுப்பாட்ட வீரர்
1997 – துளசி நாயர் , தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
1400 – ஜெஃப்ரி சாசர் , ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1343 )
1949 – மேரி அக்வர்த் எவர்ழ்செடு, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1867 )

1955 – சடாகோ சசாகி,
அணுகுண்டினால் பாதிப்படைந்த சப்பானியர் (பி. 1943 )
1958 – செ. நாகலிங்கம் , இலங்கை நீதிபதி (பி. 1958 )
1975 – காளிதாஸ் ராய் , வங்காளக் கவிஞர் (பி. 1889 )
1999 – எஸ். ராஜேஸ்வர ராவ் , இந்திய இசையமைப்பாளர், பல்வாத்தியக் கலைஞர், பாடகர் (பி. 1922 )
2012 – ஜஸ்பால் பட்டி , இந்திய நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1955 )
சிறப்பு நாள்
இறைமை நாள் ( சுலோவீனியா)



👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews