Wednesday, June 03, 2026
Monday, May 25, 2026
Thursday, May 21, 2026
Tuesday, May 19, 2026
Thursday, January 02, 2025
Sunday, October 15, 2023
மாநகராட்சி பள்ளியில் கல்வி அமைச்சர் ஆய்வு
மதுரை சுந்தரராஜபுரம்மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கல்வி அமைச்சர் மகேஷ் ஆய்வு செய்தார்.பள்ளியில் 6ம் வகுப்புக்கு சென்ற அமைச்சர் மாணவர்களை வாசிக்க கேட்டு வாசிப்பு திறனை ஆய்வு செய்தார். பள்ளி வளாகத்தில் சி.எஸ்.ஆர்.,நிதியில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை மற்றும் இயற்பியல் ஆய்வகம், ஸ்மார்ட் ரூம்மை பார்வையிட்டார்.பள்ளி அருகே ரயில்வே டிராக் இருப்பதால் மாணவர் சேர்க்கை குறைவதாக கூறி மேம்பாலம் அமைக்கவும், விளையாட்டு மைதானம்ஏற்படுத்தி தரவும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்து, பள்ளி செயல்பாடுகளை பாராட்டினார்.உடன் இணை இயக்குநர் ஸ்ரீதேவி, சி.இ.ஓ., கார்த்திகா, தலைமையாசிரியை முனியம்மாள் உடனிருந்தனர். அமைச்சரின் விசிட் குறித்து மேயர், கமிஷனர், கவுன்சிலருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.பின்னர் கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.நுாலகத்திற்கு வருகை தந்த மாணவர்கள், இளைஞர்களிடம் நுாலகத்தின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். இணை இயக்குநர் அமுதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Wednesday, February 22, 2023
உயா் கல்விக்கான கட்டணத்தை குறைக்கவே எண்ம பல்கலைக்கழகம்
உயா் கல்விக்கான கட்டணத்தை வெகுவாக குறைக்க வேண்டும், நாட்டில் திறன் மேம்பாட்டு கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே எண்ம (டிஜிட்டல்) பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கின்றன’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.
தில்லியில் திங்கள்கிழமை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் காணொலி வழியில் பங்கேற்று உரையாற்றிய மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதாவது: உயா் கல்வியில் பொது அல்லது திறன் மேம்பாட்டு படிப்புகள் என எந்தவொரு துறையிலும் இளைஞா்கள் தடையின்றி சோ்க்கை பெற்று படிப்பை முடிக்கும் வகையில் பன்முக சோ்க்கை நடைமுறையை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் எண்ம பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது உயா் கல்விக்கான கட்டணங்களை வெகுவாக குறைப்பதோடு, திறன்மேம்பாட்டு கல்வியையும் ஊக்குவிக்கும் என்று அவா் கூறினாா்.
பிராந்திய பாதுகாப்பு மற்றும் பரஸ்பர உறவை வலுப்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.
Thursday, February 02, 2023
ஓடும் இரயிலில் நிறைவேறிய பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை ; முதல்வரிடம் பரிந்துரைத்த கல்வி அமைச்சர்
ஓடும் இரயிலில் நிறைவேறிய பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை ; முதல்வரிடம் பரிந்துரைத்த கல்வி அமைச்சர் Demand of part-time teachers fulfilled by running train; Education Minister recommended to the Chief Minister
*பத்திரிக்கை செய்தி*
*ஓடும் இரயிலில் நிறைவேறிய பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை ; முதல்வரிடம் பரிந்துரைத்த கல்வி அமைச்சர்*
பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் மனசு திட்டத்திக்கு மனு அனுப்பி இருந்தோம்.அதன் விளைவாக மாண்புமிகு கல்வி அமைச்சரின் அழைப்பின் பேரில் கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி சென்று அமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கையை தெரிவித்து வந்தோம்.
மீண்டும் அமைச்சர் அழைப்பின் பேரில் 1/2/2023 அன்று ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சிகரம் சதீஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தோம்.பணிநிரந்தரம்,ஊதிய உயர்வு,மே மாத ஊதியம்,தற்செயல் விடுப்பு,கருனைத் தொகை உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை தெரிவித்தோம். அதை கனிவுடன் கேட்ட கல்வி அமைச்சர் உடனடியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் எனக் கூறினார். இது தொடர்பாக நாங்கள் அமைச்சரை சந்தித்த அன்றே வேலூருக்கு இரயிலில் பயணம் செய்த மாண்புமிகு முதல்வரிடம் நேரில் எங்களது கோரிக்கைகள் குறித்து தெரியப்படுத்தி உள்ளார்.
அதன் விளைவாக முதல்வர் அறிவித்து இத்தனை நாட்களாக நடைமுறைப்படுத்தப் படாமல் இருந்த எங்களது கோரிக்கைகளில் ஒன்றான பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்விற்கான தேதி நேற்று மாலையே அறிவிக்கப்பட்டது.
மேலும் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வு விரைவில் முழுமைபெறும் என்னும் நம்பிக்கையையும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் திருப்பூர் பழ.கௌதமன்,திருச்சி சேசுராஜா, சேலம் ராமகேசவன்,திருப்பூர் யசோதா,கோவை ராஜாதேவகாந்த் மற்றும் கடலூர் செந்தில் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Saturday, October 29, 2022
திருச்சி மாவட்டத்தில் மெய்நிகர் நூலகத்தை தொடங்கி வைத்தார்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
திருச்சி மாவட்டம் லால்குடியில் நவீன தொழிநுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் நூலகத்தை (Virtual Reality Library) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். மாணவர்கள் கடினமாக உணரும் பல பாடங்களை எளிதில் கண்டு, கேட்டு, உணர்ந்து, முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது
Saturday, October 08, 2022
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது உண்மையில்லை. போதை பொருள் இல்லா வளாகங்களாக பள்ளிக்கூடங்கள் மாற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.
Monday, September 12, 2022
கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டங்கள் விரைவில் மாற்றப்படும்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
Arts, Science College Syllabus to be Changed Soon: Higher Education Minister Ponmudi
Higher Education Minister Ponmudi has said that following the engineering syllabuses, the syllabuses of arts and science colleges in Tamil Nadu will be changed soon. Ministers Ponmudi and Ganesan inaugurated the zonal conference of Nan Muluvan Scheme at Anna University, Chennai. What is the I-first scheme? How should the plan be implemented? Ministers and officials briefed the principals about the training to be given to the students and professors.
Speaking at the conference, Minister Ponmudi said that a unique education policy similar to Tamil Nadu is being developed and he said that a new curriculum will be introduced in arts and science colleges. Minister Ponmudi said that those who complete the engineering course should start small and micro businesses in their respective areas and for that, steps will be taken to teach additional courses along with the studies and issue certificates.
Speaking earlier, Chief Minister's Private Secretary Udaya Chandran has requested that the syllabus has been changed to suit the job opportunities and the students should be prepared according to the new syllabus. Principals, professors and dignitaries of 68 engineering colleges from Chennai, Kanchipuram and Chengalpattu districts participated in this conference.
பொறியியல் பாடத்திட்டங்களை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பாடத்திட்டங்களும் விரைவில் மாற்றப்பட இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் மண்டல மாநாட்டை சென்னையில் உள்ள அண்ணா பல்கலை.யில் அமைச்சர்கள் பொன்முடி, கணேசன் துவக்கி வைத்தனர். இதில் நான் முதல்வன் திட்டம் என்றால் என்ன? திட்டத்தை எவ்வாறு நடைமுறை படுத்த வேண்டும்? மாணவர்கள், பேராசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயிற்சிகள் குறித்து கல்லூரி முதல்வர்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் விளக்கினர்.
இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் பொன்முடி தமிழகத்திற்கு இணையான தனித்துவமான கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு வருவதாக கூறிய அவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தபட இருப்பதாக தெரிவித்தார். பொறியியல் படிப்பை படித்து முடிப்பவர்கள் அவரவர் பகுதிகளில் சிறு, குறு தொழில்களை தொடங்க வேண்டும் என்றும், அதற்காக படிப்புடன் கூடுதல் படிப்புகளை கற்பித்து சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
முன்னதாக பேசிய முதலமைச்சரின் தனிச்செயலாளர் உதய சந்திரன் வேலை வாய்ப்பிற்கேற்ற வகையில் பாடத்திட்டம் மாற்றி வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ,மாணவர்களை தயார் படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மாநாட்டால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 68 பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
Sunday, August 21, 2022
4,308 காலிப் பணியிடங்களை செப்டம்பர் இறுதிக்குள் நிரப்ப நடவடிக்கை: அமைச்சர்
தமிழக முழுவதும் காலியாக உள்ள 4308 மருத்துவ காலி பணியிடங்கள் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்து மருத்துவமனையை அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் 27 லட்சம் தடுப்பூசிகள் இன்றைக்கு கையிருப்பில் இருக்கிறது. இந்த தடுப்பூசிகளையும் போடுவதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக கோர்போ வேக்ஸ் என்ற தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தற்போது மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி போட்டவர்கள் கூட கோர்போ வேக்ஸ் என்ற தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக போட்டுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
எனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக கோர்போ வேக்ஸ் என்ற தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என கூறினார். தமிழக முழுவதும் காலியாக உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் உள்பட 4308 மருத்துவ காலி பணியிடங்கள் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் தில்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள், கோவையில் புதிய மருத்துவ கல்லூரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்ற கோரிக்கையோடு தடுப்பூசிகளும் முடிந்துவிட்ட நிலையில் இருக்கிற காரணத்தினால் தடுப்பூசிகளும் கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கையோடு சந்திக்க உள்ளோம்.
இந்தியாவிலேயே தாய் சேய் மரணம் குறைவாக இருப்பது தமிழகத்தில்தான். இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை ஒரு கோடி 65 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர், இந்த திட்டம் உலகத்திற்கு முன்மாதிரியான திட்டமாக இருப்பதால் ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற உள்ள உலகப் பொருளாதார மன்றம் மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் செல்கிறார் அவருடன் தமிழக மருத்துவ துறை சார்பாக தமிழக அரசு பங்கேற்க இருக்கிறது. அதில் இல்லம் தேடி மருத்துவம் தொடர்பாக அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் குரங்கு அம்மை மற்றும் தக்காளி அம்மை நோய்களால் யாரும் பாதிக்கப்படவில்லை. கேரளா-தமிழக எல்லையில் 13 இடங்களில் கண்காணிப்புகள் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.
மேலும் தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கூட முழுவதுமாக பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. மருந்து பற்றாக்குறை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் 10 சதவீதம் அளவுக்கு மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
Friday, July 29, 2022
கனியாமூர் மாணவ, மாணவிகளுக்கு வேறு பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்தபடும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
Monday, July 11, 2022
10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் கரோனா, காலநிலை சேர்க்கப்படும்: கல்வி அமைச்சர்
நடப்பு 2022-23 கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் கரோனா மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றத்தைச் சேர்க்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் எஸ்.ஆர்.தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்வி அமைச்சர் தாஸ் கூறுகையில்,
மாநிலம் ஏற்கனவே மூன்று கரோனா அலைகளை அனுபவித்து, நான்காவது அலைக்குத் தயாராகி வருவதால் எதிர்காலத்தில் இளைய தலைமுறையை தயார்படுத்துவதற்காக தொற்றுநோய் பற்றிய ஆய்வுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்றார்.
இதேபோன்று, இயற்கை சீற்றங்களால் மாநிலம் அடிக்கடி பாதிக்கப்படுவதால், பருவநிலை மாற்றத்தால் மனித சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இது உலகளாவிய அச்சுறுத்தல் மற்றும் மாணவர்கள் இதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கரோனா மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை நடப்பு கல்வியாண்டின் இரண்டாம் பருவ பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
தொற்றுநோய் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளில் 75 சதவீத பாடத்திட்டங்கள் மட்டுமே கற்பிக்கப்பட்டன, ஆனால் இந்தாண்டு 100 சதவீதம் கற்பிக்கப்பட்டு, அதற்கேற்ப பொதுத்தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்படும் என்றார்.
Thursday, June 30, 2022
2,381 அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை நியமிக்கும் பணி தொடக்கம் - அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
தஞ்சாவூா் அருகே வல்லத்தில் புதன்கிழமை பிற்பகல் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:
தமிழகத்தில் உள்ள 2,381 அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவா் சோ்க்கையைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, ஒவ்வொரு பள்ளியிலும் பழைய முறையில் இருந்தபடி எல்.கே.ஜி., யு.கே.ஜி.யில் மாணவா் சோ்க்கை தொடங்கிவிட்டது. இதற்கான சிறப்பாசிரியா்களை நியமிப்பதற்கான தோ்வு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிகளில் இப்போது பொதுவாக முகக்கவசம் பயன்படுத்தப்படுகிறது. இதைத் தவிா்த்து வேறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்தப்படவில்லை. இப்போது இருக்கிற கட்டுப்பாடுகள் இருந்தால் போதுமானது. பள்ளிகளில் 12 வயதுக்கும் அதிகமான மாணவ, மாணவிகளில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக இரு ஆண்டுகள் கழித்து புதிதாகப் பள்ளிகளைத் திறக்கும் சூழ்நிலைதான் ஏற்பட்டுள்ளது. நிகழாண்டிலிருந்துதான் முழுமையாக பள்ளிக்கூடங்களைத் தொடங்கியுள்ளோம். கடந்த ஆண்டு செப்டம்பரில் சில வகுப்புகளும், நவம்பரில் சில வகுப்புகளும் தொடங்கப்பட்டன. அனைத்து மாணவ, மாணவிகளும் வந்து சோ்வதற்குள் மீண்டும் ஜனவரி மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிகழ் கல்வியாண்டில் எப்போதும்போல வகுப்புகள் நடைபெறுவதால், பாடங்கள், தோ்வுகள் முழுமையாக நடத்தப்படும். எனவே, இனிமேல் தோ்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
வெறும் மதிப்பெண்களை வைத்து மட்டுமே குழந்தைகளை மதிப்பிடக் கூடாது. இதற்காகவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி வருகிறோம். இதையும் மீறி 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துள்ளனா். இந்த மாதிரியான மனநிலையில் யாரும் இருக்க வேண்டாம் என்றாா் அமைச்சா்.
Saturday, May 21, 2022
நுழைவு தேர்வு வேண்டாம் : உயர் கல்வித்துறை அமைச்சர்
Minister Ponmudi speaking at the event held at Kumbakonam Government Women's College, Thanjavur District:
In higher education, the golden age of Tamil Nadu Chief Minister Stalin. At the Indian level, in higher education, 53 percent of the students are in Tamil Nadu. In addition, the federal government is announcing that more women are required to take entrance exams for BA, B.Sc., and even higher education.
It is the policy of this Government that no entrance examination is required. Students and students should also have a voice and be firm and firm in this policy. We have to deal with all this and develop the education sector. We have been insisting in Parliament on bringing education on the state list. Thus he spoke. ''நுழைவுத்தேர்வு தேவையில்லை என்பது தான் இந்த அரசின் கொள்கை,'' என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு மகளிர் கல்லுாரியில் நடந்த நிகழ்வில், அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
உயர்கல்வியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் காலம் பொற்காலம். இந்தியா அளவில், உயர்கல்வியில், 53 சதவீதம் பேர் படித்திருப்பது தமிழகத்தில் தான். அதிலும், பெண்கள் தான் அதிகம்.பி.ஏ., பி.எஸ்சி., படிப்புக்கு கூட நுழைத்தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்து வருகிறது.பிளஸ் 2 வகுப்பில் வாங்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே உயர் கல்வியில் சேர்க்கப்பட வேண்டும்.
நுழைவுத்தேர்வு தேவையில்லை என்பது தான் இந்த அரசின் கொள்கை.மாணவ, மாணவிகளும் குரல் கொடுத்து, இந்தக் கொள்கையில் திடமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாக கடன் சுமை, நிதி நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இதை எல்லாம் சமாளித்துத் தான், கல்வித் துறையை வளர்க்க வேண்டியுள்ளது.கல்வியை, மாநிலப் பட்டியலில் கொண்டு வருவது தொடர்பாக பார்லிமென்டில் வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.



