முதுகலை ஆசிரியர் தேர்வு திட்டமிட்டபடி அக். 12 அன்று நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، سبتمبر 30، 2025

Comments:0

முதுகலை ஆசிரியர் தேர்வு திட்டமிட்டபடி அக். 12 அன்று நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம்



முதுகலை ஆசிரியர் தேர்வு திட்டமிட்டபடி அக். 12 அன்று நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

முதுகலை ஆசிரியர் தேர்வு திட்டமிட்டபடி அக். 12 அன்று நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

1. தமிழகத்தில் 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) காலிப்பணியிடங்களை நிரப்ப ஜூலை 10 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

2. ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரை பெறப்பட்டன.

3. கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டதால், தேர்வை 3 வாரம் தள்ளிவைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

4. நீதிபதிகள், ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வை தள்ளிவைப்பது குறித்து பரிசீலிக்கலாம் என அறிவுறுத்தினர். 5. தேர்வு தள்ளிவைப்பு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

6. ஒரு தேர்வர் தேர்வை தள்ளிவைக்கக்கோரி முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்தார்.

7. அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணை இயக்குநர் அளித்த விளக்கத்தில், அறிவிப்புக்கும் தேர்வு தேதிக்கும் இடையே 60 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும், ஆனால் முதுகலை ஆசிரியர் தேர்வில் 90 நாட்களுக்கு மேல் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

8. எனவே, ஏற்கனவே அறிவித்தபடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அக். 12 அன்று நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة