ஏப்.23 இல் நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، أبريل 04، 2024

Comments:0

ஏப்.23 இல் நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றம்



ஏப்.23 இல் நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றம்

மதுரை சித்திரை திருவிழாவை ஒட்டி 4 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 23 ஆம் தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .

மதுரையில் வரும் 23-ம் தேதி பிரசித்திப்பெற்ற சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. அதே தேதியில் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை இயக்குநரின் அனுமதி பெற்று ஏப்ரல் 23 ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு, ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறும் என மதுரை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தொடக்கக்கல்வி இயக்குனரின் இணை செயல்முறைகளின் படி 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதி தேர்வுகள் நடத்துவது சார்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 4 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பார்வை 1ல் காணும் செயல்முறைகளில் 10.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் தேர்வு 22.4.2024 ஆம் தேதிக்கும், 12.4.2014அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல் தேர்வு 23/4/2014ஆம் தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தில் 23.4.2024 அன்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பள்ளிக்கல்வி இயக்குனரின் அனுமதி பெற்று 23.4.2024 நடைபெறும் சமூக அறிவியல் தேர்வானது 24/4/2014 அன்று நடைபெறும் என அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة