பேராசிரியர் க.அன்பழகன் விருது: 76 அரசுப் பள்ளிகள் தேர்வு சென்னை, மார்ச் 3: சிறந்த செயல்பாட்டுக்கான பேராசிரியர்
க.அன்பழகன் விருதுக்கு தமிழகம் முழுவதும் 76 அரசுப் பள்ளி களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கற்றல்-கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்து வம், மாணவர் மேம்பாடு என பன்முக வளர்ச்சியை வெளிக்கொ ணரும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் க.அன்பழகன் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந் தார்
அதன்படி, சிறந்து விளங்கும் பள்ளிகளை தேர்வு செய்வதற்கு முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட அளவி லும், பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் மாநில அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன.
மாவட்டந்தோறும் தகுதியான 4 பள்ளிகளைத் தேர்வு செய்து பள்ளிக் கல்வித் துறைக்கு அந்த குழுக்கள் பரிந்துரைத்தன. அவற்றில் இருந்து மாவட்டத்துக்கு 2 பள்ளிகள் வீதம் மொத்தம் 76 பள்ளிகளை சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்து பள்ளிக் கல் வித் துறை அறிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை அரும்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி ஆகியவை அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. செங்கல்பட்டில் நந்திவரம் அரசு தகைசால் மகளிர் மேல்நி லைப் பள்ளி, நூக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காஞ்சிபுரத்தில் மேவளூர்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, களக்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருவள்ளூரில் கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, புட்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் சிறந்த பள்ளிக ளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 76 பள்ளிகளுக்கு பேராசிரியர் க.அன்பழகன் விருது விரைவில் வழங்கப்படவுள் ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.