குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்ச் 26-இல் நேர்காணல் தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 08, 2024

Comments:0

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்ச் 26-இல் நேர்காணல் தொடக்கம்



குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்ச் 26-இல் நேர்காணல் தொடக்கம்

சென்னை, மார்ச் 7: குரூப் 1 முதன் மைத் தேர்வு முடிவுகள் வியாழக் கிழமை வெளியாகின. இதைத் தொடர்ந்து, மார்ச் 26-இல் நேர்கா ணல் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் வெளியிட் டுள்ளது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வுகள் முடிந்த நிலை யில், முதன்மைத் தேர்வுகள் கடந்த ஆண்டு ஆக.10 தொடங்கி 13-ஆம் தேதி நிறைவடைந்தன.

முதன்மைத் தேர்வுக்கான முடிவு கள் வியாழக்கிழமை வெளியிடப் பட்டன.

இதில் தேர்ச்சி பெற்ற தேர் வர்கள், நேர்காணலில் பங்கேற்க லாம். மார்ச் 26 முதல் 28-ஆம் தேதி வரை சென்னை அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேர் காணல் நடைபெறவுள்ளது.

தேர் வில் பங்கேற்பவர்கள், அசல் சான் றிதழ்களை எடுத்து வர வேண்டும் என்று அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தின் செய்திக் குறிப்பில் தெ ரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews