Breaking

Sunday, January 07, 2024

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்ட அறிக்கை



தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்ட அறிக்கை

11ஆம் தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டார தலைநகரங்களிலும் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த கட்டமாக ஜனவரி 27ஆம் தேதி மாவட்ட தலைநகரில் ஒருநாள் உண்ணா நிலை அறப்போராட்டத்தினை நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

🔥குறிப்பு:🔥

♦️வட்டாரத்தில் ஏற்படும் செலுவுகளை வட்டார அமைப்பில் உள்ள டிட்டோஜாக் சங்கங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்

மாவட்ட அளவில் நடைபெறும் செலவினங்களுக்கு ஒவ்வொரு சங்களின் மாவட்ட அமைப்பு சார்பாக 6000 நிதி காப்பாளர் சத்தியசீலன் அவர்களிடம் கொடுக்க வேண்டும்.

♦️ஆர்ப்பாட்ட இடம், வட்டார அளவில் டிட்டோஜாக் பிளக்ஸ் காவல்துறை அனுமதி ஆகியவற்றை வட்டார கூட்டத்தில் முடிவெடுத்து காலத்தின் அருமை கருதி அனைத்து சங்க நிர்வாகிகளுடன் பிரச்சார பயணம் மேற்கொள்வது குறித்து திட்டமிட வேண்டும் எனவும், அனைத்து வட்டாரங்களிலும் 100% ஆசிரியர்களை ஆர்பாட்டத்தில் பங்கேற்க செய்திட களப்பணியாற்றிட வேண்டும் என்பதையும் கனிவோடு கேட்டுக் கொள்கிறோம்.

ஒன்றுபடுவோம்!

போராடுவோம்!!

வெற்றி பெறுவோம்!!!

டிட்டோஜாக் கூட்டமைப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog