பள்ளிக்கூட மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மாணவன் மரணம் - சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலானதால் பரபரப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 25, 2023

Comments:0

பள்ளிக்கூட மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மாணவன் மரணம் - சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலானதால் பரபரப்பு

பள்ளிக்கூட மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மாணவன் சாவு

சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலானதால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா மேல்மங்க லம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். கூலித்தொழிலாளி. இவரது மகன் மாரிமுத்து (வயது 14). இவர் ஆவுடையார் கோவில் அருகே உள்ள பெருங்காடு அரசு உயர்நிலைப்பள் ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு மாரிமுத்து சென்றார். இந்நிலையில் மாலை 4 மணி அளவில் பள்ளி நேரம் முடிந்து மணி அடிக்கப்பட்டுள்ளது. அப்போது வீட் டிற்கு செல்வதற்காக அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளத் தில் உள்ள அவரது வகுப்பறையில் இருந்து மாடி படிக்கட்டு கள் வழியாக கீழே இறங்கி வந்து கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி மாரிமுத்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மாரிமுத்துவின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஓடிவந்து மாரிமுத் துவை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவன் பள்ளி கட்டிடத்தின் மாடி படிக்கட்டில் இருந்து கீழே விழும் காட்சி கட்டிடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. இந்த வீடியோ காட்சி நேற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews