பள்ளிகளில் நாளை குழந்தைத் திருமணம் தடுப்பு உறுதிமொழி ஏற்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أكتوبر 15، 2023

Comments:0

பள்ளிகளில் நாளை குழந்தைத் திருமணம் தடுப்பு உறுதிமொழி ஏற்க உத்தரவு

பள்ளிகளில் நாளை குழந்தைத் திருமணம் தடுப்பு உறுதிமொழி ஏற்க உத்தரவு Schools to take pledge against child marriage tomorrow

சென்னை, அக். 14: தமிழகத்தில் அனைத்து வகையான பள்ளிகளில் திங்கள்கிழமை காலை வழிபாட்டுக் கூட்டத்தில் குழந்தைத் திரும ணம் தடுப்பு உறுதிமொழி ஏற்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள் ளது.

இதையும் படிக்க | குழந்தைத் திருமணங்கள் இல்லா தமிழ்நாடு - இயக்குநர் உத்தரவு

பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: குழந்தைத் திருமணம் இல் லாத தமிழகம் எனும் நிலையை உறுதிபடுத்துவதற்காக மாநில அர சால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பள்ளிகளில் குழந்தைத் திருமணம் தடுப்பு உறுதிமொழி ஏற்க சமூகநலத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான உறுதிமொழிகள் அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து வகையான பள்ளிகளிலும் திங்கள்கிழமை காலை வழிபாட்டுக் கூட்டத்தில் குழந்தைத் திருமணம் தடுப்பு உறுதிமொழி ஏற்க வேண் டும். இதுதொடர்பாக தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | குழந்தைத் திருமணங்கள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة