கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிய இணையதளம் துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، سبتمبر 19، 2023

Comments:0

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிய இணையதளம் துவக்கம்



கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிய இணையதளம்

kmut.tn.gov.in என்ற புதிய இணையதளம் துவக்கம்

ஆதார் எண்ணை உள்ளீடு செய்து OTP வைத்து விவரங்களை பெறலாம்

‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது.



குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. *மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறிய தமிழக அரசு புதிய இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியது.*

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை செப்.15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவா்களுக்கு அதற்கான காரணத்தைத் தெரிவித்து கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.

விண்ணப்பதாரா்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வராதபட்சத்தில் மாற்று ஏற்பாட்டின் மூலமாக நிராகரிப்புக்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

இதற்கென தனி இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

பொதுமக்கள் தங்களது ஆதாா் எண்ணையும், கைப்பேசி எண்ணையும் உள்ளீடு செய்ய வேண்டும்.

ஆதாரில் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் வரும். இதை உள்ளீடு செய்தால், விண்ணப்பம் ஏற்கப்படாததற்கான காரணம் திரையில் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.1,000 கிடைக்கப் பெறாதவர்கள் www.kmut.tn.gov,in என்ற இணையதளத்தில் சர்பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமைத் தொகை திட்டத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரும் நோக்கில் இந்த தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.

மேல்முறையீட்டு விண்ணப்பங்களை வருவாய்க் கோட்டாட்சியா்கள் 30 நாள்களுக்குள் முடித்து வைப்பா் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.

CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة