ஆசிரியர் முகத்தில் கும்மாங்குத்து - தினமலர் நாளிதழின் அடுத்த சர்ச்சை தலைப்பு....! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 06, 2023

Comments:0

ஆசிரியர் முகத்தில் கும்மாங்குத்து - தினமலர் நாளிதழின் அடுத்த சர்ச்சை தலைப்பு....!

ஆசிரியர் முகத்தில் கும்மாங்குத்து - தினமலர் நாளிதழின் அடுத்த சர்ச்சை தலைப்பு....

தேர்வு அறையில் தூங்கிய போது எழுப்பிய ஆசிரியர் முகத்தில் கும்மாங்குத்து ! வடசென்னை பள்ளியில் மாணவன் ஆவேசம் !!

ஆசிரியர் தினத்தில் ஆசிரியரை தாக்கிய மாணவன் கைது

திருவொற்றியூர், விம்கோ நகரில் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த 30ம் தேதி முதல் மாணவர்களுக்கான 2ம் கட்ட பருவத்தேர்வு நடக்கிறது.
இதில், பிளஸ் 2 மாணவர் ஒருவர், இரு வாரங்களாக பள்ளிக்கும் வரவில்லை; தேர்வும் எழுதவில்லை. நேற்று அவரது தந்தை, மாணவரை தேர்வு எழுத வைப்பதற்காக பள்ளிக்கு அழைத்து வந்து உள்ளார்.

மேலும் பள்ளிக்கு வராததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன் தேர்வு எழுத அனுமதிக்குமாறு வலியுறுத்தினார். இதையடுத்து, மாணவரை ஆசிரியர்கள் வணிகவியல் தேர்வு எழுத அனுமதித்துள்ளனர். தேர்வு அறையில், திருவொற்றியூரைச் சேர்ந்த ஆசிரியர் சேகர், 46, பணியில் இருந்தார். தேர்வு அறைக்கு சென்ற மாணவன், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 'கூலிப்' போதைப்பொருளை சாப்பிட்டு, போதையில்

படுத்து துாங்கி உள்ளான். தேர்வு அறையில் கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் சேகர், மாணவரை தட்டி எழுப்பி தேர்வு எழுதுமாறு கூறியுள்ளார்.

மேலும், அவரிடம் இருந்து போதை பொருள் பாக்கெட்கள் சிக்கின. இதையடுத்து ஆசிரியர் மாணவரை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த மாணவர். ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மூக்கில் ஓங்கி குத்தியுள்ளார். மேலும் முகத்தில் சரமாரியாக தாக்கியதில் முகம் வீங்கி ரத்தம் கொட்டியது.

இதைப் பார்த்து அருகில் இருந்த மாணவர்கள் கத்தவே, மற்ற ஆசிரியர்கள் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் இருந்த சேகரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து விசாரித்த திருவொற்றியூர் போலீசார், 17 வயது மாணவரை கைது செய்து கெல்லீஸ் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர். போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவனால், ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பாக்கு போட்டதை கண்டித்த ஆசிரியரை மாணவன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது;

ஆசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டிய ஆசிரியர் நாளில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை;

தமிழக அரசு நினைத்தால் ஒரே ஆணையில் அனைத்து மதுக்கடைகளையும் மூட முடியும், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் அனைத்து போதைப் பொருட்களையும் ஒரே நாளில் கட்டுப்படுத்த முடியும்;

இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காக்க வேண்டிய  பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருப்பதால், அனைத்து வகையான போதைப் பொருட்களையும் முற்றிலுமான ஒழித்து தமிழ்நாட்டை போதையில்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்"

- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews