அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் துறை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை:27-ந்தேதி நடக்கிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 24, 2023

Comments:0

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் துறை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை:27-ந்தேதி நடக்கிறது

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் துறை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை:27-ந்தேதி நடக்கிறது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் சுயநிதி வேளாண் பட்டப்ப டிப்பு பி.எஸ்சி. (சுயநிதி) மற்றும் பி.எஸ்சி. தோட்டக்கலை (சுயநிதி) படிப்புகளில் உள் ள காலியிடங்களுக்கு உடனடி மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (பி. சி.), பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினர் (பி. சி.எம்.) மற்றும் எஸ்.டி. பிரிவு உள்ளிட்ட வகுப்பைச் சேர்ந்த வர்கள் இந்த மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். இதற்கான தகுதியும், விரும்பமும் உள்ளவர்கள் வருகிற 27- ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் மாணவர் சேர்க்கையில் அண்ணாமலை பல்க லைக்கழக வேளாண் புலத்திற்கு நேரடியாக சென்று கலந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வை தவறவிட்டவர்கள், சான் றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று தவறவிட்டவர்களும் இந்த நேரடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். இந்த கலந்தாய்வில் மாணவர் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு,அதன் படி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு https://annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல் வெ ளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews